games

img

மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த குத்துச்சண்டை வீரர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு சிக்கலுக்கு இடையே 2-வது லீக் ஆட்டத்தில் மெக்ஸிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் படிகளில் காலடி வைத்தது. டிசம்பர் 1-ஆம் தேதி போலந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் முடிவில் அர்ஜெண்டினாவின் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பற்றிய இறுதி முடிவு தெரியவரும். இந்நிலையில், மெக்ஸிகோ அணியை வீழ்த்திய பிறகு உடைமாற்றும் அறையில் அர்ஜெண்டினா வீரர்கள் பாட்டு,நடனம் என மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸி, மெக்ஸிகோ ஜெர்சியை வைத்து தரையை துடைத்ததாக மெக்ஸிகோ குத்துச்சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ் குற்றம்சாட்டி, மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுபற்றி ஆல்வாரெஜ் டுவிட்டர் பக்கத்தில், “நமது (மெக்ஸிகோ) ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்ஸி தரையை துடைத்துள்ளார். இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்ஸியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால் அவரை வாகனம் ஏற்றி கொன்று விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டிக் கொள்ளட்டும். மெஸ்ஸியின் அந்தஸ்துக்கு மெக்ஸிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும். அர்ஜெண்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்ஸிகோவை மெஸ்ஸி மதிக்க வேண்டும்” என மிரட்டல் விடும் நோக்கில் பதிவிட்டுள்ளார். மெஸ்ஸி காலால் மெக்ஸிகோவின் ஜெர்சியை அவமதித்தார் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.