games

img

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
15-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய இளம் அதிரடி  தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து இரட்டை  சதமடித்து அசத்தினார். முன்னாள் கேப்டன் கங்குலியின் இடத்தை ஜெய்ஸ்வால் பிடிப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 893 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 752 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், இந்திய  அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 731 புள்ளிகளுடன் 12-ஆவது  இடத்திலும், விபத்து காயம் காரணமாக நீண்ட காலம் ஓய்வில்  உள்ள ரிஷப் பண்ட் 706 புள்ளிகளுடன் 14-ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஞ்சி
பன்னுன் மீண்டும் மிரட்டல்
ராஞ்சி மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார். இது வழக்கமான செயலாக இருப்பதால் ஒன்றிய  உளவுத்துறை அமைப்புகள் பன்னுனின் செயல்பாடு களை மறைமுகமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிக்கெதி ரான 4-ஆவது டெஸ்ட் போட்டியை சீர்குலைக்கப் போவதாக பன்னுன் மீண்டும் மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் ராஞ்சி மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.