games

img

விளையாட்டு...

ரொனால்டோவைத் தொடர்ந்து மெஸ்ஸியும் சவூதி அரேபியா செல்கிறாரா?

கால்பந்து உலகில் “கிளப் சாம்பியன்ஷிப்” என்றால் ஐரோப்பா கிளப் தொடர்கள்தான் அடித்து சொல்லும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காரணம் ஐரோப்பிய கிளப் தொடர்களில் பணம் காற்றில் பறக்கும் அளவிற்கு, ஐரோப்பிய நாடு களைச் சேர்ந்த கிளப் அணிகள் அதிக தொகையை செலவழித்து, பல ஆயிரம் கோடிக் கணக்கில் வீரர்களுக்கு சம்பள மாக கொடுத்து ஒவ்வொரு தொடரையும் நடத்துகின்றன. அதிக சம்பளம், விளம்பர வருவாய் என பல்வேறு சொகுசு அம்சங் கள் இருப்பதால் கால்பந்து உலகின் தலை சிறந்த வீரர்கள் முதல் சாதாரண இளம் வீரர்கள் வரை ஐரோப்பாவே கதி என்று  விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் போர்ச்சுக்கல் நாட்டின் கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான் செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து கிளப்) அணியிலிருந்து விலகி ஆண்டுக்கு ரூ.1,740 கோடி ஒப்பந்தத்தில் (3 ஆண்டு ஒப்பந்தம் - ரூ.5,220 கோடி)இணைந்தார்.  இந்த வரிசையில் தற்போது அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், 22-வது சீசன் உலகக்கோப்பையை அர்ஜெண்டினாவுக்கு வென்று கொடுத்த கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி சவூதி அரேபியா கிளப் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தற்போது பிரான்ஸ் கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, பிஎஸ்ஜி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கா மல் சவூதி அரேபியாவிற்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள் ளார். இதனால் கடுப்படைந்த நிர்வாகம் மெஸ்ஸியை 2 வார காலத்திற்கு இடை நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ள நிலையில், மே 8 மற்றும் 13 தேதிகளில் பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்ஸி விளை யாடமாட்டார் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. சவூதி? ஸ்பெயின்? பிஎஸ்ஜி அணியின் ஒப்பந்தம் நடப்பாண்டில் நிறைவு பெறவுள்ள நிலையில், அந்த அணியின் சஸ்பெண்ட் உத்தரவு மெஸ்ஸிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மெஸ்ஸியின் திடீர் சவூதி பயணம் அந்த நாட்டில் உள்ள  கிளப் அணியின் ஒப்பந்தம் எதாவது இருக்கலாம் என சந்தேக தகவல் வெளி யாகியுள்ளது. இதுபோக 18 ஆண்டு காலம் விளையாடிய ஸ்பெயின் கிளப்  அணியான பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி மீண்டும் விளை யாட உள்ளதாக கூடுதல் தகவலும் வெளி யாகியுள்ளது. மெஸ்ஸி பார்சிலோனா வில் மீண்டும் சேரவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளியாகி இருந்தாலும், மெஸ்ஸியின் சவூதி அரேபியா பயணம்தான் புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

        ஐபிஎல் - 2023

சென்னையில் ஐபிஎல்: மிரட்டும் மழை கவலையில் ரசிகர்கள்

தமிழ்நாட்டில் கடந்த ஒருவார காலமாக கோடை  மழை புரட்டியெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம்  பிறந்தாலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதியால் மே 7 வரை தமிழ்நாட்டில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. வானிலை அறிவிப்புப்படி சனிக்கிழமை  (மே 6) மழைக்கு வாய்ப்புள்ளது. சனிக்கிழமை அன்றுதான் சென்னையில் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் (சென்னை - மும்பை) நடக்கவுள்ள நிலையில், இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் எலியும்-பூனையுமாக இருக்கும் சென்னை - மும்பை அணிகளின் ஆட்டம் என்றால் கிரிக்கெட் உலகில் தனி கிராக்கி உள்ளது. இதனால் தமிழ்நாடு ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளனர். ஆனால் மழை வழிவிட்டால் மட்டுமே போட்டி நடைபெறும் என்ற நிலை இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய ஆட்டம்

குஜராத் - ராஜஸ்தான்
இடம் : மான்சிங் மைதானம், ராஜஸ்தான்
நேரம் :  இரவு 7:30 மணி