ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கானிஸ்தான்?
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உல கக்கோப்பை தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலை யில், செவ்வாயன்று நடைபெறும் 39-ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான ஆஸ்தி ரேலிய அணி நடப்பு சீசன் உல கக்கோப்பையின் தொடக்க ஆட்டங் களில் (2 ஆட்டங்கள்) சொதப்பினா லும், அதன் பின்னர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தொடர் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் டாப் ஆர்டரில் (3- ஆவது இடம்) உள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்காத வண்ணம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் அணியான ஆப்கா னிஸ்தான் அணி இதுவரை 7 ஆட் டங்களில் விளையாடி 4 வெற்றி களுடன் புள்ளிப்பட்டியலில் (8 புள்ளிகளுடன்) 6-ஆவது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சூப்பர் பார்முடன் அரையிறுதி கனவை நனவாக்க இந்த ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் களமிறங்குவதால் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான்
இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார்
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும்.
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி
உலக செஸ் கேண்டிடேட் தொடருக்கு தேர்வு
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்றில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி ரமேஷ் பாபு மங்கோலிய வீராங்கனை பத்குயாக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் நிறைவடைந்த நிலையில், புள்ளிகள் அடிப்படை யில் முன்னிலையில் இருந்த (8.5 புள்ளிகள்) வைசாலிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு கோப்பை யுடன் ரூ.20.80 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் கேண்டிடேட் தொடருக்கு தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விதித் இதே போல ஆடவர் பிரிவில் இந்திய வீரர் விதித் குஜராத்தி தனது இறுதி சுற்றில் செர்பிய வீரர் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை எதிர்கொண்டார். இறுதி சுற்றில் எளிதாக வெற்றியை ருசித்த விதித் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். பட்டம் வென்ற விதித் குஜராத்தி யும் உலக செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார். ஏற்கெனவே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும் உலக செஸ் கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தொடரில் ஒன்றாக களமிறங்கும் அக்கா, தம்பி
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு அடுத்தபடியாக முக்கிய தொடராக இருப்பது உலக செஸ் கேண்டிடேட் தொடராகும். இந்த தொடர் அடுத்தாண்டு கனடா நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்பாக அக்காவும் (வைஷாலி ரமேஷ் பாபு), தம்பியும் (பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு) உலக செஸ் கேண்டிடேட் தொடரில் ஒரு சேர கலந்து கொள்கின்றனர்.