games

img

இங்கிலாந்து மைதானங்களுக்கு மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஏன்?

டெஸ்ட் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கு விக்கும் வகையில் சர்வதேச கிரிக் கெட் வாரியம் (ஐசிசி) உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் என்ற பெயரில் சர்வ தேச டெஸ்ட் போட்டிகளை ஒருங்கி ணைத்து புதிய தொடரை நடத்தி வரு கிறது. முதல் சீசனில் (2019-2021) இந்திய அணியை வீழ்த்தி நியூசி லாந்து சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2-வது சீசன் (2021-2023) தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.  இந்நிலையில் 2-வது சீசன்,  3-வது சீசனுக்கான இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப் பட்டன. இந்த 2 சீசன்களும், முதல்  சீசனைப் போலவே இங்கி லாந்து நாட்டிலேயே இறுதிப் போட்டி  நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசியால் நடத்தப்படும் தொடர் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். ஆனால் இங்கிலாந்து நாடு தொடரை நடத்துவது போன்று அந்த நாட்டிற்கு மட்டும் தொடர்ந்து ஹாட்ரிக் வரலாறுடன் இறுதிப்போட்டி நடத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது ஏன்? இல்லை, அங்குள்ள மைதானங்களில் சிறப்பு எதுவும் உள்ளதா? இல்லை, இங்கி லாந்து நாடு கேட்டுக்கொண்டதா? வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா?> என பல்வேறு கேள்விகள் எழுந்து  வருகின்றன. இங்கிலாந்து மைதா னங்களை போன்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக் கெட் போட்டிக்கென சிறந்த மைதா னங்கள் உள்ளது. ஆனால் இங்கி லாந்து நாட்டிற்கு மட்டும்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வழங்குவது புரியாத புதிராக உள்ளது.