games

img

டபிள்யூபிபிஎல் டி20 போட்டி - இந்திய வீராங்கனை மந்தனா சதம் அடித்து சாதனை 

டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் இந்தியாவின் மந்தனா சதமடித்ததன் மூலம் மகளிர் பிபிஎல் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை மந்தனா சமன் செய்துள்ளார். 

மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் (டபிள்யூபிபிஎல்) மெல்போர்ன் - சிட்னி அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் மெல்போர்ன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மெல்போர்ன் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளர், 55 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா கடைசி வரை போராடி 57 பந்துகளில் சதமடித்து அணியினருக்கு நம்பிக்கையளித்தார். 

கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய வீராங்கனை  ஹர்மன்ப்ரீத் கெளர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் மந்தனா 4 பந்துகளை எதிர்கொண்டார். இருந்தும் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் அற்புதமாக ஹர்மன்ப்ரீத் பந்துவீசினார். கடைசி ஓவரில் சிட்னி அணி வீராங்கனைகளால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பரபரப்பாக முடிந்த ஆட்டத்தில் மெல்போர்ன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

மந்தனா 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், மகளிர் பிபிஎல் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை மந்தனா சமன் செய்துள்ளார். 

;