அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்
டென்னிஸ் உலகில் ஆண்டு தோறும் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் திங்க ளன்று நிறைவுபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கவுப் சாம்பியன் பட்டம் வென்ற நிலை யில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்க ளன்று அதிகாலை நடைபெற்றது. 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச்சும், 2021 அமெரிக்க ஓபன் சாம்பியனான ரஷ்யா வின் மெத்வதேவ்வும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 24 முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வென்று புதிய வரலாறு படைத்தார். நடப்பாண்டில் மட்டும் ஜோ கோவிச்சுக்கு இது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, பிரெஞ்சு தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பாண்டு விம்பிள்டன் தொடரில் மட்டும் ஸ்பெயின் வீரர் அலகாரஸ் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ரூ.24 கோடி யும், 2-ஆம் இடம் பிடித்த மெத்வதேவ் ரூ.12 கோடி பரிசுத்தொகையும் பெற்றனர். இதுபோக அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட் சுற்று ஆட்டங்களில் வெளியேறியவர்களுக்கு போதுமான அளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023: இந்தியா-இலங்கை இன்று மோதல்
16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ் தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொட ரில் தற்போது “சூப்பர் 4” சுற்று ஆட் டம் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று “சுப்பர் 4” சுற்றின் 4-வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஓய்வு இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி பொதுவாக ஒருநாள் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் இடையே 2 நாள் ஓய்வு தேவைப்படும். ஆனால் ஞாயிறன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய “சூப்பர் 4” சுற்றின் 3-வது ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்ட நிலையில், அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு திங்களன்று தொடர்ந்து நடைபெற்றது. அடுத்த 12 மணிநேர இடைவெளியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. ஒருநாள் போட்டிக்கு 48 மணிநேர ஓய்வு தேவை என்ற நிலையில், இந்திய அணி ஓய்வு இல்லாமல் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இலங்கை
இடம் : பிரேமதாசா மைதானம், கொழும்பு, இலங்கை
நேரம் : மதியம் 3 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)
ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா
உலகக்கோப்பை மேடையில் அநாகரிகம்
மகளிர் உலகக்கோப்பை கால் பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கூட்டாக நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல் முறையாக கால்பந்து உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் வீராங்கனைகள் அனைத் தையும் மறந்து உற்சாக கொண்டாட்டத்தில் கலக்கி கொண்டிருந்தனர். ஆனால் இந்த கொண்டாட்டத்திற்கு ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் கொள்ளி வைத்தார். அதாவது கோப்பை வழங்கும் மேடையிலேயே லூயிஸ், ஸ்பெயின் அணியின் மூத்த வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவுக்கு முத்தம் கொடுத்தார். இந்த விதிமீறிய செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விளை யாட்டு உலகம் மட்டுமின்றி அனைத்து தர ப்பினரும் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவரின் செயலுக்கு கண்டனம் தெரி வித்தன. அதிரடி நடவடிக்கையில் களமிறங் கிய ஸ்பெயின் அரசு, லூயிஸ் ரூபியாலெ ஸை மன்னிப்பு கோரவும், பதவியை ராஜினாமா செய்யவும் உத்தரவிட்டு, 90 நாட்கள் இடைநீக்கம் செய்தது. லூயிஸ் ருபியாலெஸ் மீது ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா பாலி யல் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர் பாக விசாரணை நடைபெற்று வரும் நிலை யில், லூயிஸ் ருபியாலெஸ் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.