games

img

விளையாட்டு...

புனே டெஸ்ட் -  இந்திய அணி மீண்டும் சொதப்பல்  - டெஸ்ட் தொடரை கைப்பற்றி நியூஸிலாந்து அணி அசத்தல்

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்க நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா விற்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெங்களூரு) நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேயில் வியாழனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற நியூஸிலா ந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் - அஸ்வின் ஜோடி வலுவான தாக்குதல் மூலம் நியூஸிலாந்து அணி யை 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு சுருட்டியது. நியூ சிலாந்து அணி தரப்பில் அதிக பட்சமாக கான்வே 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப் பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நியூஸிலாந்து அணியின் மூத்த வீரர் சான்ட் னர் சுழற்பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் மிக மோசமான அளவில் திணறினர். ஜடேஜா (38), ஜெய்ஸ்வால் (30), கில் (30) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த னர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களு க்கு ஆட்டமிழந்தது. நியூஸி லாந்து அணி தரப்பில் சான்ட் னர் 7 விக்கெட்டுகளையும், பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை யும், சவுத்தி ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். 103 ரன்கள் முன்னிலை யுடன் இரண்டாவது இன்னிங் ஸை தொடங்கிய நியூஸிலா ந்து அணி டாம் லதாமின் (86 ரன்கள்) நிதான ஆட்டத்தால் 69.4 ஓவர்களில் 255 ரன் களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணியின் வெற்றிக்கு 359  ரன்கள் நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் டுகளை வீழ்த்தினார். 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இல க்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (77), ஜடேஜா (42) ஆகிய இருவர் மட்டுமே திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீரர் கள் வழக்கம் போல சான்ட்னர் சுழலில் சீட்டுக்கட்டாய் சரிந்த நிலையில், 3ஆவது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவெளைக்குப் பிறகு இந்திய அணியின் 2ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.  இந்திய அணி 60.2 ஓவர் களில் 245 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இதன்மூலம் நியூ ஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப் பற்றியது. இரண்டு இன்னிங் ஸில் அபாரமாக பந்துவீசி 13 விக்கெட்டுகளை சாய்த்த நியூ ஸிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம் பர் 1 அன்று மும்பையில் நடை பெறுகிறது.

பார்டர் - கவாஸ்கர் டிராபி 

இந்திய அணி விபரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டி கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் விபரம் :  ரோகித் சர்மா (கேப்டன்), ஜாஸ்பிரித் பும்ரா (துணை கேப் டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், சர்ப ராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) , அஸ்வின், ரவீந்திர  ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசீத் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர்.  ரிசர்வ் வீரர்கள் : முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

தமிழ் தலைவாஸ்  -  ஜெய்ப்பூர்
நேரம் : இரவு 8 மணி

உ.பி., யோதாஸ் - குஜராத்
நேரம் : இரவு 9 மணி

இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி மைதானம், ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)