கடந்த சீசன்களை விட மந்தமான சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொட ரின் 15-வது சீசன் தற்போது பாதிக்கட்ட த்தை கடந்து விட்ட நிலையில், ஐபிஎல் தற்போது வேறு திசை நோக்கி பய ணித்து வருகிறது. முதலில் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற மனநிலையில் தான் ரசி கர்கள் ஐபிஎல் சீசனில் சுழலுவார்கள். ஆனால் இப்பொழுது எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற சூழலில் ஐபிஎல் தொடர் நகர்ந்து வரு கிறது. இந்த பணம் தொடர்பான ஆசை வர கார ணம் ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப் நிறுவனங் கள் தான்.
ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப் என்றால் என்ன?
ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப் என்பது குறிப்பிட்ட நுழைவு கட்டணம் செலுத்தி ஒரு ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் ஆடும் லெ வனில் உள்ள 22 பேரில் 11 பேர் கொண்ட அணி யை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்கள் நன்றாக விளை யாடினால் அவர்களுக்கு புள்ளி கொடுப்பார்கள். அதாவது பேட்டிங், விக்கெட், பீல்டிங், கேட்சிற்கு இவ்வளவு புள்ளிகள் கிடைக்கும். நீங்கள் தேர்வு செய்த 11 பேர் முதலிடத்திற்கு வந்தால் ரூ.5 கோடி, குறிப்பிட்ட இடத்திற்கு வந்தால் இத்தனை லட்சம், ஆயிரம் என பரிசுகள் விபரம் கொடுக்கப் பட்டிருக்கும். தேர்வு செய்யப்பட்ட அணி தர வரிசையில் இருக்கும் இடத்தை பொறுத்து கூடுதல் பணம் கிடைக்கும் 50%, 30%, 20% பணம் கிடைக்கலாம் அல்லது நீங்கள் செலுத்திய நுழைவு கட்டணம் கூட (கைக்காசு) கிடைக்காமல் போகலாம். இதுதான் ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப் ஆகும்.
வெளிப்படைத்தன்மை இல்லை
ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-களில் வெற்றிபெற்றவர்கள் என பல்வேறு விளம்பரம் இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் பதிவிடப்படுகின்றன. ஆனால் உண்மை யாகவே அவர்கள் தான் வெற்றி பெற்றார்களா? அல்லது ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-களின் தனிப்பட்ட பதிவாளரா? இளைஞர்கள் இருக்கும் தரவரிசை சரியானதா? தரவரிசையில் இருக்கும் அனைவரும் மனிதர்களா? இல்லை கணினி ரோபோக்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும் இளைஞர்கள் அதை பற்றி கவலைப்படாமல் பணத்தை வாரி இறைத்து வீணாக்குகின்றனர்.
பணத்தை இழக்கும் இளசுகள்
ஒருதடவை குறிப்பிட்ட பணம் கிடைத்து விட்டால் ஒரே போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளை உருவாக்கி பணத்தை தண்ணீராய் செலவு செய்து வருகின்றனர் இளசுகள். கொரோ னா ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் பள்ளி மாணவர்கள் தற்போது இதில் மூழ்கியுள்ளனர்.
தடை செய்யப்படுமா?
ரம்மி சீட்டுக்கட்டு ஆன்லைன் வடிவத்தைப் போன்றதே ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-களும். இரண்டுமே தனிமனித பொரு ளாதாரத்தை இழக்கும் அபாயம் கொண்டது. தற்கொலை சம்பவங்களால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்மி விளை யாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-களால் தற்கொலை சம்பவங்கள் நிகழும் முன்னரே தடை அல்லது சில கட்டுப்பாடுகள் விதிப்பது நல்ல முடிவாக இருக்கும்.
ஆதிக்கம் செலுத்தும் ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-கள்
முதலிடத்தில் இருப்பது ட்ரீம் 11 (DREAM 11) தொடர்ந்து பேன் பைட் (FAN FIGHT), எம்பிஎல் (MPL), மை ட்ரீம் 11(MY DREAM 11), மை 11 சர்க்கிள் (MY 11 CIRCLE) ஆகிய ஸ்போர்ட்ஸ் பிளாட்பார்ம் ஆப்-கள் நன்றாக கல்லா கட்டி வருகின்றன.
மாட்ரிட் மாட்ரிட் ஓபன் அசரென்கா அவுட்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெலாரசின் அசரென்கா, போட்டித் தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் அனீஸ்மோவாவிடம் 1-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். (மாலை 4 மணி நிலவரம்)