5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தல நகரமான தரம்சாலாவில் வியாழனன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வேகப்பந்துவீச்சில் சீரான வேகத்தில் ரன் குவிக்க ஆரம்பித்ததால், 20 ஓவர்களுக்கு முன்னரே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுழற்பந்துவீச்சை களமிறக்கினார். வழக்கமாக அஸ்வின் (4), குல்தீப் யாதவ் (5), ஜடேஜா (1) ஆகியோர்களின் மிரட்டலான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறிய இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கிராவ்லி 79 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டு களையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன் குவித்த நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்திய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்ட மிழந்த நிலையில், ரோகித் சர்மா (52), சப்மன் கில் (26) ஆகியோர் களத்தில் உள்ளனர். வெள்ளி யன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டங்கள் தொடங்குகிறது.