இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கி லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொடங்குகிறது. கோலி, ரோகித் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குவதால், பலமான இங்கி லாந்தை எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வியுடன் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். வீரர்கள் விபரம் இந்தியா சப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் குமார், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷதீப் சிங், ஆகாஷ் தீப். இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), போப் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஜாக் கிராலி, ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், கிறிஸ் வோக்ஸ், போப் (விக்கெட் கீப்பர்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), சாமுவேல் ஜேம்ஸ் குக், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர், ஜோஷ், ஜேமி ஓவர்டன். (இரு அணிகளிலும் இருந்து 11 பேர் மட்டுமே ஆடும் லெவனுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணி வீரர்கள் பட்டியலில் 19 பேர் இருந்தா லும், சப்ஜுட் சேர்த்து 15 பேர் மட்டுமே அணிக்குழுவில் இருப்பார்கள். மற்ற 4 பேர் அவசர கால வீரர்கள் ஆவர்)
இடம் : ஹெட்டிங்லி, லீட்ஸ், இங்கிலாந்து
நேரம் : மதியம் 3:30 மணி
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ்,
ஜியோ ஹாட் ஸ்டார் (ஓடிடி)
இனி திருநெல்வேலியில் டிஎன்பிஎல் ஆட்டங்கள்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 தொடரின் 9ஆவது சீசன் நடுக்கட்டத்தை தாண்டியுள்ளது. முதல் இரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூர், சேலத்தில் நடைபெற்ற நிலையில், 3ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் திரு நெல்வேலியில் சனிக்கிழமை அன்று முதல் தொடங்குகிறது. மதுரை - திரு நெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தியா சிமெண்ட் மைதானத்தில் 3ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால் வீரர்கள் இடம்பெயர்வு மற்றும் இதர காரணத்திற்காக வெள்ளிக்கிழமை அன்று டிஎன்பிஎல் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு உற்சாக வரவேற்பு
27 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரில் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டின் முக்கிய நகரான ஜோகன்னஸ்பர்க்கின் டாம்போ சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் பிரம் மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் ஜோகன்னஸ்பர்க் நகரம் விழாக்கோலம் பூண்டது.