தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வரும் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று லீக் நிறைவு பெற்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (செவ்வாய் - மாலை 5 மணி) ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் வியாழனன்று தொடங்குகிறது. லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட களைப்பை போக்க புதனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.