தமிழ்நாடு வீரரும், அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கடும் போராட்டத்திற்கு இடையே உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். திடீரென தினேஷ் கார்த்திக் பற்றி வெறுப்பு கருத்தைக் கூறினார் கம்பீர். ஏன் அவரை உலகக்கோப்பையில் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று மட்டும் தான் கேட்கவில்லை. “வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும்” என வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ்நாடு வீரரா? இல்லை, கம்பீருக்கும்- தினேஷ் கார்த்திக்குக்கும் தனிப்பட்ட சண்டையா? இல்லை வேறு எதுவும் பிரச்சனையா? ஐபிஎல் அணியில் கொல்கத்தா கேப்டன்ஷிப் தொடர்பாக எதுவும் கிளைமேக்ஸ் உள்ளதா? எனத் தெரியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் பற்றி மிக மோசமாக சாடியுள்ளார் கம்பீர்.
கடைசி பந்தில் சிக்ஸர் விலகிய பொழுது கம்பீர் எங்கே சென்றார்?
10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரர் என்று கூறுகிறார் கம்பீர். 2020-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை - வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் (வங்கதேசத்திற்கு எதிராக) 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவையை பூர்த்தி செய்து வரலாற்று வெற்றியுடன் இந்திய அணியின் நற்பெயரை காப்பாற்றினார். தினேஷ் கார்த்திக்கை அன்று அனைவரும் கொண்டாடினார்கள். கம்பீருக்கு அப்பொழுது தெரியவில்லையா? தினேஷ் கார்த்திக்கின் அருமை. 2022 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக மிக குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். இது பற்றி கம்பீர் அறியவில்லையா? இல்லை கோலி மீதான வெறுப்பால் அவரது அணியின் ஆட்டங்களை பார்க்கவில்லையா? என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆனால் ஒன்றே ஒன்று கம்பீரின் இந்த கருத்துக்கள் அணிக்குள், வீரர்களுள் கடும் பிளவை ஏற்படுத்தும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. கம்பீர் மட்டும் தான் இந்த வேலையை செய்கிறார். மற்ற மூத்த வீரர்கள் ஆலோசனை மற்றும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை அணியில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.