games

img

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது சூர்யகுமார் பெயர் பரிந்துரை

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது சூர்யகுமார் பெயர் பரிந்துரை

2022-ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டி-20 ஓவர் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்திய அதிரடி பேட்டர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் சூர்யகுமார் உடன் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), சிக்கந்தர் ரசா (ஜிம்பாப்வே), சாம் கர்ரன் (இங்கிலாந்து) ஆகியோரும் போட்டியில் உள்ளனர். சூர்யகுமார் 2022-ஆம் ஆண்டில் 187.43  என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 1,164 ரன்களுடன்,  நடப்பு ஆண்டு டி-20 ஆட்டங்களில் அதிக ரன்  எடுத்தவர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது

“பாக்சிங் டே” டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரு கிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி (“பாக்சிங் டே” - கிறிஸ்துமஸ் சீசனில் நடக்கும் போட்டி) மெல்போர்ன் நகரில்  திங்களன்று தொடங்கியது.  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 189 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய  அணி தனது முதல் இன்னிங்சில் வார்ன ரின் (200) இரட்டை சதத்தின் உதவி யால் 8 விக்., இழப்பிற்கு 575 ரன்கள் குவித்தது.  386 ரன்கள் பின்னிலையுடன் 2-ஆம் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பி ரிக்க அணி, முதல் இன்னிங்ஸை போ லவே மிக கடுமையாக திணறியது. பவுமா (65), வெரைன் (33) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட மிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 68.5  ஓவர்களில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.  இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி  182 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ்  வெற்றியுடன், 3 போட்டிகளை கொண்ட  டெஸ்ட் தொடரை 2-0 கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

வில்லியம்சன் 5-ஆவது முறையாக இரட்டை சதம்

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற் றுப்பயணம் மேற்கொ ண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரு கிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கராச்சியில் திங்களன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  முதல் இன்னிங்ஸில் பாபர் (161), சல்மான் (103) ஆகியோரின் சதத்தால் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங் கிய நியூசிலாந்து அணி வில்லியம்சனின் (200 - ஆட்டமிழக்கவில்லை) அபார இரட்டை சதத்தின் உதவியால் 4-ஆம் நாளின் தேனீர் இடைவேளைக்கு முன்பு 194.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 174 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4-வது நாளின் 3-வது இன்னிங்சில் 15 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது வீரர்  பாகிஸ்தானுக்கு எதிராக விளாசிய இரட்டை சதம் மூலம் சர்வதேச டெஸ்ட்  அரங்கில் 5-வது முறையாக இரட்டை சதம் அடித்த, 5-வது வீரர் என்ற பெரு மையை பெற்றார் நியூசிலாந்து வீரர்  வில்லியம்சன். டெஸ்ட் தொடரில் 5  முறை இரட்டை சதம் விளாசியவர் களான ராகுல் டிராவிட் (இந்தியா), அலஸ்டர் குக் (இங்கிலாந்து),கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோருடன் இணைந் துள்ளார் வில்லியம்சன். அதிகமுறை டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் (12) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து
(முதல் டெஸ்ட், 5-வது நாள்)
நேரம் : காலை 10:30 மணி
இடம்: கராச்சி/ சேனல்: சோனி ஸ்போர்ட்ஸ்