இலங்கை அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி ஆல்ரவுண்ட ருமான தனுஷ்கா குணதிலகா டி-20 உல கக்கோப்பைத் தொடரில் தேர்வு செய்யப் பட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். ஆனால் பயிற்சியின் பொழுது காய மடைந்ததால் தனுஷ்கா குணதிலகா நீக்கப்பட்டு, பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். அணியில் நீக்கப்பட்டி ருந்தாலும், இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே தங்கி இருந்தார். இந்நிலையில் தனுஷ்கா சிட்னி போலீ சாரால் திடீரென கைது செய்யப்பட்டார். டேட்டிங் ஆப் மூலம் கடந்த 2-ஆம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு வீட்டில் 29 வயது பெண்ணை தனுஷ்கா பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையிலேயே தனுஷ்காவை கைது செய்யப்பட்டுள்ளதாக சிட்னி காவல் துறை இலங்கை அணி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற நடைமுறைகளின் படி, ஐசிசியுடன் கலந்தா லோசித்து முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திங்க ளன்று மேலும் ஒரு அறிக்கை வெளியிட்டு, “தனுஷ்கா குணதிலகா அனைத்து வடி விலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்யப்படு வதாக அறிவித்துள்ளது. மேலும் தனுஷ்கா வேறு எந்த அணி தேர்வுக்கும் பரிசீலனை செய்யப்படமாட்டார் எனவும், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எந்தவகையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
சிறையில் தனுஷ்கா
பாலியல் வன் கொடுமை விவகா ரத்தில் சிக்கியுள்ள தனுஷ்கா குணதிலகாவை நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சுரி ஹில்ஸ் சிறையில் அடைத்த னர். தொடர்ந்து திங்களன்று டவுனிங் சென்டர் நீதி மன்றத்தில் சிறையில் இருந்த வாறே காணொளி மூலம் தனுஷ்கா ஆஜர்படுத்தப் பட்டார். தனுஷ்காவின் ஜாமீன் மனுவையும் விசாரித்த நீதிபதி ஜாமீன் வழக்க மறுத்துவிட்டார். இதன்மூலம் தனுஷ்காவின் சிறைவாசம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.