தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் வைத்துள்ள நிலையில், எந்த அணிக்கு கோப்பை என நிர்ணயிக்கும் கடைசி டி-20 ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கு வதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை
இடம் : சின்னச்சாமி மைதானம், பெங்களூரு
நேரம் : இரவு 7 மணி
மிரட்டும் மழை : கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஞாயிறன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவீதம் உள்ளது.