புதுதில்லி, ஜூன் 2 - 15-ஆவது டாடா ஐபிஎல் தொடரில் முதன்முறையாக நுழைந்த குஜராத் டாடா டைட்டன்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றதுடன், கோப்பையை யும் வென்றது. அந்த அணியினர் நன்றாக விளை யாண்டனர் என்பதைக் காட்டிலும், எதிர் அணியினர் எப்படி இவ்வளவு எளிதில் தோற்றார்கள் என்ற கேள்வி கிரிக்கெட் ரசி கர்கள் மத்தியில் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமன்றி, இறுதிப்போட்டியில் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டி ருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜ ராத்தைச் சேர்ந்தவரும், நாட்டின் உள் துறை அமைச்சருமான அமித்ஷா ஸ்டேடி யத்திற்குள் நுழைந்த பிறகு அடுத்த டுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இந்நிலையில்தான், ஐபிஎல் தொடரில் மோசடிகள் அரங்கேறியுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி பர பரப்பைக் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அமித்ஷாவின் மக னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) பொதுச் செயலாள ருமான ஜெய் ஷா மீது, சுப்பிரமணியசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். “ஐபிஎல் தொடரின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக இருக்க லாம் என்ற எண்ணம் புலனாய்வு அமைப்பி னரிடையே பரவலாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அமித்ஷா-வின் மகன் பிசிசிஐ-யின் அறி விக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்ப தால் அதை அரசு செய்யாது. எனவே பொது நல வழக்கை தொடுக்க வேண்டும்” என்று டுவிட்டரில் சுப்பிரமணியசாமி பதி விட்டுள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த பதிவு பாஜக வட்டாரத்திலும், கிரிக்கெட் ரசி கர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.