games

img

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறார் சேவாக்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகேவுள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளியன்று (ஜூன் 2) இரவு 6.55 மணிக்கு கோரமண்டல் விரைவு ரயில் (ஷாலிமர் - சென்னை சென்ட்ரல்), யஷ்வந்த்பூர் (பெங்களூரு - ஹவுரா) விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாதில் 275 பேர் பலியாகினர். 1,175 பேர் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், இந்த கோர ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவி, கல்வி அறிவை கொடுப்பதுதான். “சேவாக் இன்டர்நேஷனல் உறைவிட பள்ளியில்” இந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும், மருத்துவக் குழுவினருக்கும் மற்றும் ரத்த தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;