games

img

விளையாட்டு...

ஐபிஎல் போட்டியை மிரட்டிய 8ஆம் வகுப்பு பயிலும் இளங்கன்று

14 வயதில் பிரமிக்க வைத்த  ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு 4 வருடத்திற்கு பிறகு பிறந்தவர்

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய  உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற் போது ஐபிஎல்-க்கு 18 வயது ஆகி றது. இத்தகைய சூழலில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த பின்பு 4 வருடங்க ளுக்கு பிறகு (வயது கணக்கின் படி),  அதாவது 2011இல் பிறந்த பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (8ஆம் வகுப்பு  படிக்கிறார் - வயது 14) என்ற இளங்  கன்று ஐபிஎல் தொடரை மிரட்டி வரு கிறது. நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணிக்காக  ரூ.1.10 கோடி மதிப்பில் ஏலம் எடுக் கப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல் தொடருக்கு ஏலம்  எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, அதே  போன்று மிக இளம் வயதில் ஐபிஎல்  களத்தில் காலடி வைத்தவர் என்ற பெருமையுடன் சனிக்கிழமை அன்று  லக்னோ அணிக்காக களமிறங்கினார். முதல் பந்திலேயே சிக்ஸ் காயம் காரணமாக ஓய்வில் உள்ள  கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பதில்  வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க  வீரராக களமிறக்கியது ராஜஸ்தான் நிர்வாகம். இது மிகவும் தைரிய மான முடிவு ஆகும். சர்வதேச தரத்  தில் உள்ள வீரர்கள் அதிகமுள்ள ஐபிஎல் களத்தில் 14 வயது வீரரை  தொடக்க வீரராக திடீரென களமிறங்கி யது மிகவும் தைரியமான முடிவு தான்  ஆகும். ஆனாலும் இதை விட மிக மிக  தைரியமான விஷயம் ஒன்று நிகழ்ந்  துள்ளது.  அது யாதெனில், தொடக்க வீரராக  களமிறங்கிய சூர்யவன்ஷி முதல்  பந்திலேயே சிக்ஸர் விளாசி அமர்க்களப்படுத்தினார். சூர்யவன் ஷியின் சம்பவத்தால் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மான்சிங் மைதானம் குலுங்கியது. ராஜஸ்தான் வீரர்கள் துள்ளிக் குதித்தனர். லக்னோ வீரர் கள் வாயடைத்து போனார். ஆனந்த கண்ணீரா?  சோக கண்ணீரா? தொடர்ந்து வேகம் காட்டிய சூர்ய வன்ஷி 3 சிக்ஸ், 2 போர் என 20 பந்து களில் 34 ரன்கள் குவித்து எதிர்பாரா விதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்தவுடன் சூர்யவன்ஷி கண்ணீருடன் பெவி லியன் இருக்கைக்கு சென்றார். முதல்  போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சூர்ய வன்ஷி ஆனந்த கண்ணீருடன் கண் கலங்கினாரா? இல்லை, அதிக ரன்  குவிக்க முடியாததால் கண் கலங்கி னாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள் ளது. ஆனாலும் இது பெரிய விஷய மல்ல. டாப் டிரெண்டிங்கில்  வைபவ் சூர்யவன்ஷி சனிக்கிழமை அன்று இரவு முதல்  ஞாயிறன்று மாலை வரை சூர்ய வன்ஷியின் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை அன்று இரவு முதல் ஞாயிறன்று காலை வரை பேஸ்புக், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சூர்ய வன்ஷி டாப் டிரெண்டிங்கில் வைர லாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஆம் வகுப்பு  மாணவன் சூர்யவன்ஷிக்கு நாடு முழுவதும் வாழ்த்து குவிந்து வரும் நிலையில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் எக்ஸ்  தளத்தில்,”8ஆம் படிக்கும் சிறு வனின் ஐபிஎல் விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணி யின் கேப்டனாக இருந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா - குஜராத்

நேரம் : இரவு 7:30 மணி; இடம் :  ஈடன் கார்டன் மைதானம்,கொல்கத்தா, மேற்கு வங்கம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)