தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனியின் சாதனையை, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 24 வயதான ரிஷப் பந்த், தனது 26வது டெஸ்ட் போட்டியிலேயே 100 டிஸ்மிசலை செய்துள்ளார்.
இந்திய அணி சிறப்பாக பந்துவீசியதால் தென்ஆப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா(2), தாக்குர்(2), சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 4 கேட்சுகளை பிடித்தார். இந்திய அணிக்காக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் தற்போது தனது பெயரில் புதிய சாதனை படைத்துள்ளார்.