ஐபிஎல் 2025 நடுவர்களுக்கு பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கண்டனம்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற 68ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங் அடித்த பந்து சிக்ஸ் லைன் நோக்கி சென்றது. அதனை தில்லி வீரர் கருண் நாயர் பாய்ந்து பிடித்தார். ஆனால் தனது கால் பவுண்டரி எல்லையில் பட்டத்தை ஒப்புக் கொண்டு சிக்ஸ் என கூறினார். ஆனால் சிக்ஸா? விக்கெட்டா? என மூன்றாவது நடுவருக்கு கள நடுவர்கள் பரிந்துரை செய்தனர். கேட்ச் பிடித்த போது கருண் நாயரின் கால் பவுண்டரி எல்லையில் படவில்லை என மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து ஷஷாங் சிங் ஆட்டமிழந்ததாக அறி விக்கப்பட்டார். கேட்ச் பிடித்த வீரரே இது சிக்ஸ் என ஒப்புக்கொண்ட போது, நடுவர்களின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடுவர்களுக்கு பஞ்சாப் உரிமையாளரும், நடிகையு மான பிரீத்தி ஜிந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கருண் நாயர் பந்தைப் பிடிக்க முயன்றபோது அவரது கால் பவுண்டரி எல்லையில் படவில்லை என மூன்றாவது நடுவர், அதை பரிசோதித்து அறிவித்தார். ஆனால் கேட்ச் பிடிக்க முயன்ற பீல்டரே சிக்ஸ் என்று சொல்லும்போது, எப்படி மூன்றாவது நடுவர் தவறான தீர்ப்பை அளித்தார்? இத்தனை தொழில்நுட்பங் கள் இருக்கும் போது, இதுபோன்ற தவறுகள் நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என நடுவர்களை காட்ட மாக விமர்சித்துள்ளார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சீன வீரரிடம் ஸ்ரீகாந்த் தோல்வி
மலேசியா மாஸ்ட ர்ஸ் பேட்மிண் டன் தொடரின் இறுதி ஆட்டங் கள் ஞாயிறன்று நடை பெற்றது. ஆடவர் ஒற்றை யர் பிரிவு இறுதி ஆட்டத் தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீயை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கடுமை யாக போராடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 11-21, 9-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் சீனாவின் எஸ்.எப்.லீ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சீனாவிற்கு 4 பட்டங்கள் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மட்டுமே போட்டியை நடத்தும் நாடு (மலேசியா) பட்டம் வென்றுள்ளது. ஆட வர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் கலப்பு இரட்டையர் என 4 பிரிவுகளிலும் சீனர்களே பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
களிமண் மைதானத்தில் விளையாடுவது சவாலான காரியம்
டென்னிஸ் உலகில் மொத்தம் 4 கிராண் ட்ஸ்லாம் தொடர்கள் நடை பெறுகின்றன. ஆஸ்திரேலியா, பிரெஞ்சு (பிரான்ஸ்), விம்பிள்டன் (இங்கிலாந்து), அமெரிக்கா உள்ளிட்ட 4 தொடர்களில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா தொடர்கள் செயற்கையான புல் அமைப்புகளை கொண்ட மைதானத்திலும், விம்பிள்டன் இயற்கையான புல்வெளியிலும், பிரெஞ்சு ஓபன் களிமண் தரையிலும் நடைபெறுகிறது. மற்ற ஆடுகளங்களை விட களிமண் மைதானத்தில் பந்துகள் மெதுவான வேகத்தில் நகர்வதாலும், திடமாக கணிக்க முடியாத அளவிற்கு பந்து துள்ளலுடன் (ஸ்விங் போன்று) பறக்கும் என்பதாலும் களிமண் மைதானத்தில் விளை யாடுவது மிகவும் சவாலான காரியம் ஆகும். குறிப்பாக வீரர் - வீராங்கனைகள் முழு திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே களிமண் மைதானத்தில் சோபிக்க முடியும் என்ற சூழல் இருப்பதால் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட களிமண் ஆடுகளங்களில் நடைபெறும் போட்டிகள் பரபரப்பாகவே நடைபெறும் எனது குறிப்பிடத்தக்கது.