பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் களிமண் தரையில் நடைபெற்று வருகிறது. இது சற்று மாறுபட்ட திறன் கொண்டது. இந்த வகையான டென்னிஸ் ஆடுகளங்களில் சர்வீஸை கணிப்பது கடினம். மிகவும் கவனமாக விளையாடினால் தான் சாதிக்க முடியும். அதாவது பந்து எந்தநேரத்தில் எப்படி எகிறும், எப்பொழுது மந்தமாக இறங்கும் என்பதை கணிப்பதே மிகவும் சிரமமான விஷயம் ஆகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இளம்வீரர்கள் தங்களது கணிப்பில்லாத முரட்டுத்தனமான ஷாட்கள் கிரிக்கெட் விளையாட்டுகளில் வீசப்படும் பவுன்சர் போல எகிறிவருகிறது. இதனால் அனுபவமிக்க மூத்தவீரர்களே கடுமையாக திணறி வருகிறார்கள். ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் களிமண் தரையில் நன்றாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
களிமண் தரைகளில் நடை பெறும் ஒரே கிராட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடரின் ஆடவர் 4-ஆம் சுற்று ஆட்டத் தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸிடம் ரஷ்ய வீரர் காச்சாநொவ் 1-6, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். மகளிர் ஒற்றை யர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை கசட்கீனாவை இத்தாலி யின் கேமிலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.இருபாலர் ஒற்றையர் பிரிவில் செவ்வாயன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.