games

img

தமிழ்நாட்டில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்

விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு தலைநகர் சென்னையில் திங்களன்று நடைபெறும் 22-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 ஆட்டங்களில் (நெதர்லாந்து, இலங்கை) வெற்றி பெற்று, 2 ஆட்டங்களில் (இந்தியா, ஆஸ்திரேலியா) தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை (இங்கிலாந்து) மட்டுமே ருசித்துள்ளது. மற்ற 3 ஆட்டங்களில் (இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து) தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து அரங்கேறும் தொடர் தோல்வியில் இருந்து மீள ஆப்கானிஸ்தான் அணியும், புள்ளிப்பட்டியலில் டாப் 4-க்கு முன்னேறும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் சென்னையில் நடைபெறும் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது. 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், 
சென்னை, தமிழ்நாடு
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி : ஹாட் ஸ்டார் 
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
சிக்கல் : ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அவமானத்தால் ருத்ரதாண்டவம் ஆடும் ஆஸி., தெ.ஆ.,
சீனியர் அணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆஸ்திரேலியா நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரே லியா அணி முதல் 2 லீக் ஆட்டங்களில் இந்தியா,  தென் ஆப்பிரிக்க அணிகளிடம் போராடி வீழ்ந்தது. இந்த  தோல்வியால் 5 முறை சாம்பிய னான ஆஸ்திரேலியா அணி  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்று கடும் கிண்ட லுக்கு உள்ளா னது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி யை சமூகவலை தளங்களில் வறுத்தெடுத்தனர். அவமா னத்தால் வெகுண்டெழுந்த ஆஸ்திரேலிய அணி  அடுத்த இரண்டு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான்  அணிகளை புரட்டியெடுத்தது. இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி சாதாரணமாக விளையாடவில்லை. அனல் பறக்கும் வேகத்தில் பந்துவீச்சு மட்டும் பேட்டிங்கிலும் மிரட்டியது. ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரி லும் மிக மோசமான அதிரடியால் விளையாடி இலங்கை, பாகிஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது.

தென் ஆப்பிரிக்கா

உலகக்கோப்பையில் அதிர்ஷ்டம் இல்லா அதிரடி அணியான தென் ஆப்பிரிக்கா நடப்பு சீசனில் சூப்பர் பார்மில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் இலங்கை,  ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா 3-ஆவது லீக் ஆட்டத்தில் இளம்  அணியான நெதர்லாந்து அணி யிடம் படுதோல்வியை சந்  தித்தது. கடும்விமர்சனத்துக்கு  உள்ளான தென் ஆப்பிரிக்க அணி சனிக்கிழமையன்று  நடைபெற்ற தனது 4-ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பி யன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 399 ரன்கள் குவித்து,  229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து  அணியின் வெற்றியால் ஏற்பட்ட அவமானத்தால்  இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பெரியளவில் சிரிக்காமல் விளையாடினர். சதம் மற்றும் விக்கெட் வெற்றி கொண்டாட்டங்களை குறைத்தனர்.

பார்ம் பிரச்சனையால் கடைசி இடம் பிடித்த பொழுது ஏற்பட்ட அவமானத்தால் ஆஸ்திரேலிய அணியும், நெதர்லாந்து அணியிடம் ஏற்பட்ட படுதோல்வியால் ஏற்பட்ட அவமானத்தால் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் அவமானத்தின் காரணமாக அடுத்த ஆட்டங்களில் பலமான அணியோ, பலம் குறைந்த அணியோ என பாகுபாடு இல்லாமல் கடல் எல்லையில் அடியெடுத்து வைக்கும் சுனாமி போல எதிரணியை புரட்டியெடுத்து இரு அணிகளும் ருத்ரதாண்டவமாடி வெற்றியை ருசித்துள்ளது. அவமானத்தால் வெகுண்டெழுந்துள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆக்ரோஷமான ஆட்டம், சீனியர் மற்றும் சாம்பியன் அணிகளை வெகுவாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.