games

img

விளையாட்டு... - ஐபிஎல் 2023

வடமாநிலங்களில் ஸ்பான்சர் டிக்கெட்டுகள் அதிகம்  ரசிகர்களை கண்டுகொள்வதில்லை

ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்பான்சர் டிக்கெட்டுகள் மிக அதிகள வில் வழங்கப்படுகிறது. அதாவது தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில், முக்கியமாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அர சியல், விளம்பர நிறு வன ஸ்பான்சர், பிசிசிஐ ஸ்பெஷல், தரகர் ஒதுக்கீடு என பல்வேறு வகையில் ஸ்பான்சர் டிக்கெட்டு கள் கொடுக்கப்படு கின்றன. முக்கியமாக வட மாநிலங்களில் பாஜகவினர், நடிகர்கள், தொழிலதிபர்கள் என 40% பேருக்கு அதிகமாக  ஸ்பான்சர் டிக்கெட்டுகள் கிடைத்து விடுகிறது. இதுபோக வசதிபடைத்த ரசிகர்கள் 30% டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி விடுகின்றனர். ஆனால் சாதாரண ரசிகர்களின் நிலைமையோ படுமோசம். வெறும் டிக்கெட்டுகள் 15 முதல் 20% மட்டுமே கிடைக்கின்றன. இதனால் வடமாநிலங்களில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனால் பிசிசிஐ கண்டுகொள்வதில்லை.

தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை 

தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால் வடமாநிலங்களை போன்று சென்னையில் ஸ்பான்சர், அரசியல் ஆதிக்கம் கிடையாது. முதலில் ரசிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மீதம் இருந்தால் ஸ்பான்சர், அரசியல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பெண்கள் ஐபிஎல் டிக்கெட்டுகள் வாங்க தனி வரிசை அமைத்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதுபோக மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதியும் அளிக்கப்படுகிறது. 

அரசியலுக்கு தனி ஒதுக்கீடு இல்லை 

சென்னை மைதான டிக்கெட் விற்பனையில் அரசியல் ஒதுக்கீடு இல்லை என்பதற்கான ஆதாரமாக, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எங்களுக்கு இடஒதுக்கீடு மூலம் டிக்கெட் வேண்டுமென்று கேட்டார். அதற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”உங்கள் நண்பர் மகனிடம் (அமித் ஷா மகன் ஜெய் ஷா - பிசிசிஐ செயலாளர்) கூறி டிக்கெட் பெற்றுக்கொள்ளவும்” எனக் கூறி டிக்கெட் அரசியலுக்கு தனி ஒதுக்கீடு மறுத்தது தமிழ்நாடு அரசு.

ஐபிஎல் தொடரை மிரட்டும் கேரள சிங்கம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு இளம் வீரரை கண்டு 9 அணிகள் நடுங்குகின்றன. கேப்டன்ஷிப், பேட்டிங், கீப்பிங் என அனைத்து துறையிலும் நட்சத்திர வீரராக இந்திய தேசிய அணி அடுத்த தலைமுறையின் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வரும் அந்த கேரள சிங்கத்தின் பெயர் சஞ்சு  சாம்சன். 28 வயதாகும் இளம் வீரரான சஞ்சு சாம்சன் கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் பிறந்தவர். கேரள அணி யின் முதல் தர ஆட்டத்தின் மூலம் மிக  விரைவில் இந்திய இளையோர் அணியில் இடம்பிடித்து அங்கு மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ் தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2016, 2017 ஆகிய 2 தொடர்களில் மட்டும் தில்லி அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், மற்ற ஐபிஎல் சீசன் களில் ராஜஸ்தான் அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான செயல் பாட்டால் சஞ்சு சாம்சனை 2021-ஆம் ஆண்டு கேப்டனாக நியமித்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். 2022-ஆம் ஆண்டு தொடரில் ராஜஸ்தான் அணியை இறுதி வரை கொண்டு சென்று  அசத்தினார். நடப்பு சீசனிலும் ராஜஸ்தான்  அணியை அதே போல் வழிநடத்தி வரும் சஞ்சு சாம்சன் 10 புள்ளிகளுடன் முத லிடத்தில் கம்பீரமாக வைத்து எதிரணி களை ஒற்றை ஆளாக மிரட்டி வருகிறார்.  

அமைதிப் புயல் கேப்டனாக களத்தில் இருக்கும் பொழுது சஞ்சுவிடம் தேவையில்லா சிரிப்பு, பேச்சு எதுவும் இருக்காது. பீல்டிங் நிற்கவைத்து, அறிவுரை கூறி, அடுத்த என்ன செய்வது என்று சிந்திப்பது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார். வெற்றி, விக்கெட் என எந்தவித கொண்டா ட்டமாக இருந்தாலும் ஒரு லிமிட்தான்.  பறக்கும் பந்துகள் கேப்டன்ஷிப், கீப்பிங் பிரிவை விட பேட்டிங்தான் சஞ்சு சாம்சனின் முக்கிய பிளஸ் பாயிண்ட் ஆகும். யார்? எப்படி? எந்தவிதத்தில் பந்துவீசினாலும் தைரிய மாக சிக்ஸர் விளாசும் முரட்டு பேட்டிங் குணம் கொண்ட வர். 2017 முதல் 2022 வரை ஒவ் வொரு சீசனிலும் சராசரியாக 340 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். நடப்பு சீசனில் கூட 8 ஆட்டங்களில் 198 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். சஞ்சு சாம்சன் நெஞ்சுக்கு மேல் எகிறும் பந்துகளை அசால்ட்டாக சிக்சருக்கு அனுப்புவதுதான் கண்கொள்ளா காட்சி ஆகும்.  பேட்டிங், கீப்பிங், கேப்டன்ஷிப் என மூன்று முக்கியமான வகையில் சிறந்து விளங்கும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியை வழிநடத்தும் அளவிற்கு திறமை உள்ள நிலையில், அவரை எப்படி  பிற்காலத்தில் பயன்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சஞ்சு சாம்சன் 2015 முதல் இந்திய அணி யில் இடம்பிடித்து ஒரு சில ஆட்டங் களில் மிரட்டி வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

கொல்கத்தா - குஜராத்
இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா
நேரம் : மதியம் 3:30 மணி

தில்லி - ஹைதராபாத்
இடம் : ஏ.ஜே. மைதானம், தில்லி
நேரம் :  இரவு 7:30 மணி

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா