மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் இருப்பது போல மகளிருக்கும் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடர் நடத்தும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரி யம் ஓராண்டுக்கு முன் அறிவித்தது. இதற்கான அனைத்து வேலை களும் நிறைவடைந்த நிலையில், சனி யன்று டபிள்யுபிஎல் தொடர் தொடங்கு கிறது. மார்ச் 26-ஆம் தேதி வரை மும்பையின் இரு மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த டபிள்யுபி எல் தொடரில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னோ ஆகிய நகரங்களின் பெயரில் 5 அணிகள்களமிறங்குகிறது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தம் 87 பேர் ஏலத்தில் தேர்வாகி களம் காணவுள்ள நிலை யில், தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 (பிபா உலகக்கோப்பை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி), ஜியோ சினி மாவில் (ஓடிடி - இலவசம்) காணலாம்.
கங்குலியின் முயற்சியில் கிடைத்த வெற்றி
ஆடவருக்கு ஐபிஎல் தொடர் இருப்பது போல மகளிருக்கும் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடர் நடத்த கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடன் மகளிர் பிரீமியர் லீக் திட்டத்தை அறிவித்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த பொழுதிலும் கங்குலி கண்டுகொள்ளவில்லை. கடுமையாக போராடி, கடும் சிரமத்துடன் மகளிருக்கும் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடர் திட்டத்தை வகுத்து கொடுத்தார். அவரது முயற்சியால்தான் இன்று டபிள்யுபிஎல் தொடர் நடைபெறுகிறது.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்
சமீபத்தில் ஒடிசாவில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. தோல்விக்குப் பொறுப்பேற்று தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் (ஆஸ்திரேலியா), இதர பயிற்சி யாளர் கிரேக் கிளார்க், ஆலோசகர் மிட்செல் டேவிட் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜி னாமா செய்த நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரைக் புல்டன் (48) நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க தேசிய அணிக்காக 195 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள புல்டன் 25 வருட பயிற்சியாளர் பணி அனுபவம் உடையவர். புல்டன் அயர்லாந்து அணியின் பயிற்சியாளராக 2014 முதல் 2018 வரை யிலும், பெல்ஜியம் அணியின் உதவிப் பயிற்சி யாளராகவும் இருந்துள்ளார். அவரது பயிற்சி யில் அயர்லாந்து 100 வருடங்களில் முதல்முறை யாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. மேலும் உதவிப் பயிற்சியாளராக இருந்த பொழுது பெல்ஜியம் அணி ஒலிம்பிக்கிலும் (2020 - டோக்கியோ), 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தங்கமும் வென்றது. 2015-ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஹாக்கியின் சிறந்த பயிற்சியாளர் விருதை கிரைக் புல்டன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அபார வெற்றி : ஸ்மித் வியூகத்தில் வீழ்ந்தது இந்தியா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் ஆஸ்தி ரேலிய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் சற்று சுதாரித்து விளையாடி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 88 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் லியோன் (8 விக்.,) சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மீண்டும் திணறி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 75 ரன்கள் நிர்ணயம் செய்தது. அதோடு 2-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளியன்று நடை பெற்ற 3-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை சீசனில் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை (78 ரன்கள்) எளிதாக எட்டியது.