games

img

டிஎன்பிஎல் பிளே ஆப் சுற்றுகள் இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎல் தொடரின் 6-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுரை, திருநெல்வேலி, சென்னை (சேப்பாக்கம்), கோயமுத்தூர் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஐபிஎல் தொடரைப் போன்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் செவ்வாயன்று முதல் தொடங்குகிறது. பிளே ஆப் சுற்றின்  தொடக்க நிகழ்வான எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டி யலில் 3 மற்றும் 4-வது இடத்தை பிடித்த மதுரை - கோவை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி குவாலிபையர் - 2க்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்.  புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மோதும் (புதனன்று நடைபெறுகிறது) குவாலிபையர் - 1 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறும். தோற்கும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியோடு குவாலிபையர் - 2 ஆட்டத்தில் விளையாடும்.

இன்று எலிமினேட்டர் 
மதுரை - கோவை 
இடம் : எஸ்சிஎப், வாழப்பாடி, சேலம்
(எஸ்சிஎப் சேலத்தில் இருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது. வாழப்பாடி செல்லும் வழி மற்றும் அப்பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் எஸ்சிஎப் மைதானத்திற்கு செல்லலாம்)
நேரம் : இரவு 7:15 மணிக்கு