சமூக வலைத்தளங்களில் பரவும் புரிதல் இல்லாத கருத்து
நடப்பு சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார். அதாவது ரோஹித் சர்மாவிற்கு அடுத்த நிலையில் உள்ள அணியின் தலைவர். ரோஹித் சர்மா இருந்தாலும் அணியை ஏறக்குறைய 60% கட்டுப்பாட்டிலும், ஆலோசனையிலும் அணியை மறைமுகமாக வழிநடத்தும் முக்கிய நபர் கே.எல்.ராகுல் ஆவார். ஏதோ 3 ஆட்டங்களில் சொதப்பியதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தாய்நாடு திரும்ப உள்ளதாகவும் பல்வேறு போலிக்கருத்துக்கள் வெளியாகின. அணியிலிருந்து பல்வேறு வீரர்களை மாற்றம் செய்யலாம். ஆனால் கேப்டன், துணை கேப்டன், விக்கெட் கீப்பர் ஆகிய நபர்களை நீக்கம் செய்ய வேண்டுமானால் (காய பிரச்சனை தவிர்த்து) நிர்வாக உத்தரவு பெற்று, பல்வேறு ஆலோசனை, உறுதியான முடிவு எடுத்த பின்னரே நீக்கம் செய்ய முடியும். இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது வெறும் 3 போட்டிகளுக்காக கே.எல்.ராகுல் போன்ற முக்கிய நபரின் நீக்கம் குறித்து தவறான கருத்து தெரிவிப்பது மிகவும் மோசமானது ஆகும்.
நடப்பு சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் கடுமையாக திணறிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் (பாகிஸ்தான் (4), நெதர்லாந்து (9), தென் ஆப்பிரிக்கா (9)) மொத்தம் 22 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பி னார். இதனால் அணியிலிருந்து கே.எல்.ராகு லை நீக்க கோரிக்கை குரல் வலுத்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான 4-வது “சூப்பர் 12” ஆட்டத்தில் கே.எல்.ராகுல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் அரைசதம் (50 ரன்கள்) அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு மட்டையால் பதிலடி கொடுத்துள்ளார்.