உலக மாரத்தான் சாம்பியன்ஷிப் : முன்னணி வீரர்களை நீக்கிய கென்யா
தடகள உலகின் முக்கிய பிரிவான மாரத்தான் விளையாட்டில் சிறந்த நாடு எது என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் கென்யா என்று கூறி விடலாம். அந்தளவுக்கு கென்யா வீரர் - வீராங்கனைகள் மாரத்தான் மற்றும் தொடர் ஓட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் உலக மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் கென்யா நட்சத்திர வீரர்களை நீக்கி சாதாரண வீரர்களுடன் களம் காண்கிறது கென்யா. அதாவது கெல்வின் கிபோட், பிரிஜிட் கோஸ்கி உள்ளிட்ட பலரை நீக்கிவிட்டு 2-ஆம் தர அணியுடன் களமிறங்குகிறது கென்யா.
உலக மாரத்தான் சாம்பியன்ஷிப்பிற்கான கென்ய அணி
ஆடவர் : டைட்டஸ் கிப்ருடோ, திமோதி ரோனோ,
ஜோசுவா பெலெட், மைக்கேல் கிதே,
பெத்வெல் கிபெட் கிப்சும்பா
பெண்கள்: ரோஸ்மேரி வான்ஜிரு, சாலி செபியேகோ,
ஷைலின் ஜெப்கோரிர், மார்கரெட் வங்காரி,
பெட்டி செப்க்வோனி
முன்னணி வீரர், வீராங்கனைகள் நீக்கம் தொடர்பாக கென்யா விளையாட்டு அமைச்சகம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் 2-ஆம் தர அணியுடன் கென்யா களமிறங்குவதால் புடாபெஸ்ட் உலக மாரத்தான்
தொடரில் மற்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎல் 2023
இன்று விடுமுறை
ஐபிஎல் தொடரை போன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2016 முதல் டிஎன்பிஎல் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி-20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரின் 6-வது சீசன் திங்க ளன்று தொடங்கியது. கோயமுத்தூர், திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மைதானங்களில் நடைபெறும் இந்த டிஎன்பிஎல் தொடரின் முதல் 6 லீக் ஆட்டங்கள் கோயமுத்தூர் எஸ்என்ஆர் மைதா னத்தில் நடைபெறும்படியும், அதன்பிறகு திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயமுத்தூர் எஸ்என்ஆர் மைதானத்தில் 6 லீக் ஆட்டங்கள் வெள்ளியன்று நிறைவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் தொடங்கு கிறது. வீரர்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்காக சனியன்று டிஎன்பிஎல் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் விடுமுறை நாளான ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரைப் போல கோடிகளில் புரளும் டிஎன்பிஎல் அணிகள் கோடிக்கணக்கில் செலவுசெய்து அணிகளை வாங்கியுள்ள உரிமையாளர்கள்
ஐபிஎல் தொடரை போலவே டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளை ஏல நடைமுறை மூலம் பல கோடி செலவு செய்து தொழிலதிபர்கள் வாங்கி யுள்ளனர். ஐபிஎல் தொடர் என்பது ஒரு உலகளாவிய தொடர் போன்றது. அங்கு கோடிகள் காற்றில் பறப்பது சற்று சாதாரணமான விஷயம்தான் என்றாலும், சாதாரண ஒரு மாநில தொடரான டிஎன்பிஎல் தொடரிலும் கூட அணிகள் கோடிகளில் புரளுவது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை சென்றால் வரும் காலங்களில் ஐபிஎல் தொடருக்கு இணையான போட்டித் தொடராக டிஎன்பிஎல் தொடர் மாறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
டிஎன்பிஎல் அணிகளும், உரிமையாளர்களின் விபரம்
1. சென்னை (ரூ.5.2 கோடி) - பி.சிவந்தி ஆதித்யன்
(தந்தி குழுமம், மெட்ரானேஷன் சென்னை டெலிவிஷன்)
2. சேலம் (ரூ.5.2 கோடி) - செல்வகுமார் (விவோ (சீன மொபைல் கம்பெனி) - தென் மண்டல விநியோகஸ்தர்)
3.கோவை (ரூ.5 கோடி) - லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
4. திண்டுக்கல் (ரூ.3.4 கோடி) - டேக் சொலியூசன் நிறுவனம்
5. திருச்சி (ரூ.3.6 கோடி) - ரூபி கட்டுமான நிறுவனம்
6. திருப்பூர் (ரூ.3.3 கோடி) - ஐ ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் (தியேட்டர்)
7. மதுரை (ரூ.4 கோடி) - கோத்தாரி குழுமம்
8. திருநெல்வேலி - கிரௌன் போர்ட்ஸ் நிறுவனம்
அணி பரிமாற்ற முறையில் மாற்றப்பட்டதால் திருநெல்வேலி அணியின் தொகை தெரியவில்லை