இந்திய அணி விரைவில் மீளும் கபில்தேவ் நம்பிக்கை
69 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 18 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சி யாக கைப்பற்றி, இந்திய சொந்த மண்ணில் அசைக்க முடியாத சக்தி யாக நிகழ்ந்து வந்தது. ஆனால் பெரி யளவு சீனியர் வீரர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் இந்திய அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், “நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி யடைந்தாலும் இந்தியா வலிமை யாக திரும்பும்” என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நம்பிக்கை தெரி வித்துள்ளார். இதுகுறித்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் பொழுது அவர் மேலும் கூறுகையில்,”கிரிக்கெட்டை உலக விளையாட்டாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட் என்பது 14 அல்லது 15 நாடுகளில் மட்டும் விளையாடும் விளை யாட்டு அல்ல. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இந்த பொறுப்பை நிறைவேற்றாமல் தாமதம் செய்கிறது” என அவர் கூறினார்.
ஹரியானா - தில்லி
நேரம் : இரவு 8 மணி
தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா
நேரம் : இரவு 9 மணி
இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி மைதானம், ஹைதராபாத் / சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
பாபர் அசாமிற்கு சிக்கல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டி களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படு தோல்வியை (இன்னிங்ஸ் தோல்வி) சந்தித்தது. இதனால் கடுப்படைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் சீர்திருத்தம் என்ற பெயரில் பாபர் அசாமை நீக்கியது. காயம் எதுவு மின்றி பாபர் அசாமை நீக்கியது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பாபர் அசாம் இல்லாமல் பாகிஸ்தான் அணி எப்படி இங்கிலாந்து அணியை சமாளிக்கப் போகிறதோ? என பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான 2 மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி பதிலடி வெற்றியுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி மிரட்டியது. பாகிஸ்தான் அணி சூப்பர பார்மில் இருந்து மீண்டாலும், பாபர் அசாம் இல்லாமலேயே அந்த அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி யுள்ளது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் இந்த அசத்த லான செயல்பாடு பாபர் அசாமிற்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இனிமேல் அணியில் அவருக்கு நிரந்தரமாக இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.