games

img

வாழைப்பழ கடை திறங்கள்... முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள்...

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்டுள்ள தோல்வியை சமாளிக்க ஐபிஎல் தொடரால் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என ஓய்வு கோரிக்கை விடுத்து,  உலகக்கோப்பைக்கு பின்பு நியூசிலாந்து, வங்கதேசம் தொடர்களில் ஓய்வு எடுத்தனர். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், உலகக்கோப்பை பெற்றுத் தந்தவருமான கபில் தேவ் வீரர்களின் தனிப்பட்ட ஓய்வு குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார். நிகழ்ச்சியில் கபில்தேவ் கூறிய தாவது: ஓய்வு தொடர்பாக நான் பொதுவாக கேட்கிறேன், நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், எங்களுக்கு அழுத்தம்  நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தை  சரியா? அழுத்தம் உள்ளது என தெரிந்தும் ஏன் அந்த மாதிரி யான இடத்தில் நீங்கள் ஆடுகிறீர்கள்.

யார் உங்களை ஐபிஎல் தொடரில் விளையாட சொன்னார்கள்? அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர்  உங்களை கடிந்து கொள்வார்கள். இதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் நீங்கள் விளையாடவே தேவையில்லை. சொந்த நாட்டுக்காக ஆடும் போது நீங்கள் அழுத்தத்தை உணர்வீர்களா? அது எப்படி சாத்தியம்? 100 கோடி மக்கள்  தொகை கொண்ட நாட்டில் இருந்து 20 பேர் விளையாடு கிறீர்கள். இதில் உங்களுக்கு அழுத்தம் இல்லை. மாறாக  நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். நாட்டுக்காக விளை யாடும் பொழுது மக்களிடம் நீங்கள் அதிகப்படியான அன்பை பெறுகிறீர்கள். அந்தப் பெருமையை பெற கற்றுக் கொள்ளுங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க வார்த்தை. நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், வேண்டாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்துகிறார்களா?. வாழைப்பழ கடை திறங்கள். முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு அருமை யான வாய்ப்பு (இந்திய அணியில் விளையாட) கிடைத்துள் ளது. வாய்ப்பை ஏன் அழுத்தமாக நினைக்கிறீர்கள். ஒரு  விஷயத்தை நீங்கள் அழுத்தம் என்று நினைத்தால், அதில்  நல்லது எதுவும் வராது” என இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் எச்சரிக்கை அறிவுரை வழங்கினார்.