games

img

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 4 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் வலுவான நிலையில் உள்ள லக்னோ, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக ஆடிவருகிறது. 

இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

;