சர்வதேச மல்லர்கம்பம் தமிழ்நாடு வீரருக்கு இரட்டை தங்கப்பதக்கம்
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2-வது சர்வதேச மல்லர்கம்பம் தொடர், கடந்த மே 9 அன்று தொடங்கி 11 அன்று நிறைவு பெற்றது. இந்த சர்வதேச மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த ஹேமசந்திரன் தனிநபர் மற்றும் குழு என இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2023
ஐபிஎல் தொடரை மிரட்டும் “பானி பூரி”காரர் மகன்
13 பந்தில் அரை சதமடித்து கலக்கல்
பிங்க் ஜெர்சி அணியின் (ராஜஸ் தான்) தொடக்க வீரரை பார்த்தாலே மற்ற ஐபிஎல் அணிகளுக்கு ஒரு கிறுகிறுப்பு ஏற்படும் நிலை உள்ளது. எப்படி பந்துவீசினாலும் விளாசுகிறார்? இவருக்கு எப்படி பந்துவீசுவது என சர்வ தேச தர வீரர்கள் கூட குழம்பிப்போயுள்ள னர். மேலும் தற்போதைய 16வது சீசனில் இவர்தான் அதிக ரன் குவித்த வர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் (575 ரன்கள்) இருப்பதால், அவருக்காக வியூகம் அமைக்கும் கட்டாயம் கூட ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் பிரபல அதிரடி வீரர்களான சேவாக்(இந்தியா), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ட்ரெஸ்கொதிக் (இங்கிலாந்து), அன்வர் (பாகிஸ்தான்), ஜெயசூர்யா (இலங்கை), கப்தில் (நியூ சிலாந்து) ஆகிய வீரர்களோடு யாரை ஒப்பிடுவது என்ற குழப்ப நிலையை ஏற்ப டுத்தும் வீரர் பெயர் யாஸஸ்வி ஜெய்ஸ்வால். 21 வயதாகும் யாஸஸ்வி ஜெய்ஸ் வால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந் தவர். இவர் தந்தை தெரு ஓரங்களில் “பானி பூரி” விற்கும் தொழில்செய்கிறார். பிறந்தது மட்டும் உத்தரப்பிரதேசம். வளர் ந்தது, தங்கியிருப்பது எல்லாமே மகா ராஷ்டிரா மாநிலம் மும்பையில்தான். 2018 முதல் மும்பை அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் ஜெய்ஸ் வால், 2019 இளையோர் உலகக் கோப்பையில் (யு-23) இந்திய அணிக் காக விளையாடியுள்ளார். 2020 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், நடப்பு சீசன் முதலே யாரென்று கிரிக்கெட் உலகிற்கு தெரியும் அளவிற்கு மிரட்டலாக விளை யாடி வருகிறார். நடப்பு சீசனில் 12 ஆட்டங் களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் ஒரு சதத்துடன் 575 ரன்கள் குவித்து ஒரு ரன்கள் வித்தியாசத்தில் 2-வது இடத்தில் உள்ளார். பெங்களூரு வீரர் டு பிளசிஸ் 576 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்
கங்குலி ஸ்டைலில் கலக்கல்
தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் இடது கை பேட்டிங் ஸ்டைல் கொண்டவர். 180 டிகிரி நிலையில் வெளுத்து வாங்கும் மனநிலை கொண்டவர். கங்குலியின் நேர்த்தியான ஸ்டைலில் கலக்கும் ஜெய்ஸ்வால் யார் பந்து வீசுகிறார் என்று பார்ப்பதில்லை. தான் எதிர்கொள்ளும் முதல் பந்திலிருந்தே அதிரடிதான். வியா ழனன்று கொல்கத்தா அணிக்கெதி ரான ஆட்டத்தில் 13 பந்துகளில் அரை சதமடித்து (50) ஐபிஎல் சாதனையுடன், 2 ரன்னில் 2-வது சதத்தை மேற்கொண்டு ரன் இல்லாத (வெற்றி இலக்கு குறைவு) காரணத்தினால் கோட்டை விட்டார்.
ரோல்மாடல் மீம்ஸ்: ஜெய்ஸ்வால்
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது தந்தையின் “பானி பூரி” கடையில் உதவியாளராக வேலை பார்த்து, படிப்பு, கிரிக்கெட் பயிற்சியுடன் முன்னேறி தற்போது கிரிக்கெட் உல கம் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதனால் ஜெய்ஸ்வா லின் வாழ்க்கையை ஒரு ரோல்மாடலாக மீம்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்திய அணியில் வாய்ப்பு?
நடப்பு சீசனில்தான் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் இந்திய கிரிக்கெட் உல கத்திற்கு தெரியவந்துள்ளது. அவரது ஆடும் விதத்திற்கு கூடுதலான அளவில் சர்வதேச தரத்திலான பயிற்சியை அளித்தால் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பிடிப்பார்.
இந்திய அணியில் வாய்ப்புக்கான கதவுகளை தகர்த்துக் கொண்டிருக்கிறார்
ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்,”ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான வாய்ப்பிற் கான கதவை வெறுமனே தட்டவில்லை. தொடர்ச்சியாக ரன் குவித்து அதை தகர்த்துக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பான வீரர்களின் கைகளில் இருக்கிறது. இதன் மூலம் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.