வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் டாக்காவில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ரிஷப் பண்ட் (93), ஷெராயஸ் (87) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 2-ஆம் நாளின் 3-வது சீசனில் 314 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.