மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் கோப்பை என்ற பெயரில் பள்ளிகளுக்கு இடையே 40-40 ஓவர் தொடர் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் சரஸ்வதி வித்யாலயா பள்ளியும் - சித்தேஷ்வர் வித்யாலயா பள்ளியும் மோதிய ஆட்டம் நாக்பூரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சரஸ்வதி வித்யாலயா அணி, யாஷ் சாவ்டேவின் மிரட்டலான ஆட்டத்தின் உதவியால் 40 ஓவர்களுக்கு (240 பந்து கள்) விக்கெட் இழப்பின்றி 714 ரன்கள் குவித்து அசத்தியது. யாஷ் சாவ்டே ஆட்ட மிழக்காமல் 508 ரன்கள் (178 பந்துகள் - 81 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள்) குவித்து பிரமிக்க வைத்தார். 715 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சித்தேஷ்வர் வித்யாலயா அணி 5 ஓவர்களில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் சரஸ்வதி வித்யாலயா 705 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 40 ஓவர்கள் கொண்ட போட்டி யில் 5 சதங்கள் விளாசிய (508 ரன்கள்) யாஷ் சாவ்டேவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சாதனையை அங்கீகரிப்பதில் சிக்கல்
குறைந்த இன்னிங்ஸ் போட்டி யில் (40 ஓவர்களில்) யாஷ் 508 ரன்கள் குவித்திருப்பது ஒருவித சாதனைதான் என்றாலும், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகில் பள்ளி மாணவர்களின் அதிக ரன் குவிப் புக்கான முழுமையான தரவு கள் இல்லாததால் யாஷின் சாத னையை அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா? இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்
இலங்கை கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள் போட்டிகளை கொண்ட தொட ரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டி களை கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலை யில், தற்போது ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொட ரின் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கேரள தலை நகர் திருவனந்தபுரத்தில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது.
இந்தியா - இலங்கை
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : க்ரீன்பீல்ட், திருவனந்தபுரம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)