சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக டாப் பந்துகள் வீசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டி20 முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடினார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட்டுகள், கிலீசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தனர். இங்கிலாந்து அணி 17 முடிவில் 121 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. புவனேஸ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக டாப் பந்துகள் வீசிய வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
முதல் இடங்களில் புவனேஸ்வர் குமார் 500, சாமுவேல் பத்ரீ 383, டிம் சவுதி 368, மிச்செல் ஸ்டார்க் 354 பந்துகள் வீசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்