games

img

தீக்கதிர் விளையாட்டு செய்திகள்

விசாகப்பட்டினம் டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் வெள்ளியன்று தொடங்கியது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்  (209) இரட்டை சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. தொடர்ந்து தனது  முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்தயாவின் பும்ரா (6 விக்.,) பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் பின்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மிடில் ஆர்டர் வீரர் சப்மன் கில்லின்  (104) சதத்தின் உதவியால் 78.3 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399  ரன்களை நிர்ணயம் செய்தது.  மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 14 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்து இருந்தது. கிராவ்லி (29), ரேஹான்(9) ஆகியோர் களத்தில் இருந்தனர். திங்களன்று தொடர்ந்து 4-ஆவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

7 ஓவருக்கு 44 ரன்கள்  வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் போல செயல்படும் முகேஷ் குமார்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்  குமார் (30) கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யதன் மூலம் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து மூத்த வீரர்கள் ஓய்வின் பொழுது விளையாடி வரு கிறார். கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் ஐபிஎல் வேறு, சர்வதேச ஆட்டம் வேறு என்பதை அவர் புரிந்து கொள்ளாமல் ஒரே மாதிரியான பந்துவீச்சை வெளிப் படுத்தி கடந்த காலங்களில் சர்ச்சை யை ஏற்படுத்தி வந்த நிலையில், கட ந்த காலங்களை போலவே தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரி லும் புரிதல் இல்லாமலேயே பந்து வீசி வருகிறார்.  2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் போல பந்துவீசி 7 ஓவர் களுக்கு 44 ரன்களை வாரி வழங்கி வள்ள லாக உருவெடுத்ததால், கேப்டன் ரோஹித் அவருக்கு மேற்கொண்டு ஓவர் வழங்காமல் பீல்டிங் மட்டும் செய்ய உத்தரவிட்டார்.  இந்த விவகாரம் கடும் சர்ச்சை யை ஏற்படுத்திய நிலையில், முகேஷ் குமாருக்கு என்ன சிறப்புஉள்ளது? முக்கியமான ஆட்டங்களில் மந்தமான வீரரை களமிறக்குவது ஏன்? பிசிசிஐக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளாரா? என ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் கேள்வி கணைகளை எழுப்பி வருகின்றனர்.

இன்று 4-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா- இங்கிலாந்து
நேரம் : காலை 9:30 மணி
இடம் : ஒய்எஸ்ஆர் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திரா
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

புரோ கபடி 2024 இன்றைய ஆட்டங்கள்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)

ஜெய்ப்பூர் - பாட்னா
(106-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

தில்லி - புனே
(107-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி