ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் 22-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், புதனன்று அடி லெய்டு மைதானத்தில் நடைபெறும் 23-வது “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது ஆகும். காரணம் “குரூப் 2” பிரிவில் இந்தியா, வங்க தேச அணிகள் 3 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் சரிசமமாக உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இந்தியா சற்று முன்னிலையில் அதாவது 2-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3வது இடத்திலும், ஜிம்பாப்வே (3 புள்ளி கள்) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் (2 புள்ளிகள்) 5-வது இடத்திலும், நெதர்லாந்து (புள்ளிகள்பெற வில்லை) 6-வது இடத்திலும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டை) முதலிடத்தில் உள்ளது. புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தற்போதைய நிலையில் “குரூப் 2” பிரிவை ஆராய்ந்தால் புள்ளிபட்டியலில் உள்ள முதல் 5 அணிகள் குறைந்த அளவு புள்ளி களுடன் அரையிறுதி சுற்றுக்கு வரிந்து கட்டி நிற்கின்றன. இதனால் புதனன்று நடைபெறும் 23-வது “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிர காசமாக இருக்கும் என்பதால், இந்தியா - வங்கதேச ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
ஜிம்பாப்வே - நெதர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி
இந்தியா - வங்கதேசம்
நேரம் : மதியம் 1:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : அடிலெய்டு ஓவல்
மழை வருமா?
அடிலெய்டு நகரில் வானிலை நிலவரப்படி புதனன்று 30% மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் மாலை நேரங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி இந்தியா - வங்கதேச ஆட்டம் இரவு நேரத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அபாரம்
செவ்வாயன்று நடைபெற்ற 20வது “சூப்பர் 12” ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. (ஸ்கோர் : ஆப்கானிஸ்தான் 144/8 (20), இலங்கை 148/4 (18.3))