games

img

விளையாட்டு செய்திகள்

ராஞ்சி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  முதல் 3 டெஸ்ட் போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த நிலையில், 4-ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வெள்ளியன்று தொடங்கியது.  டாஸ் வென்று முதலில் கள மிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் (122) அபார சதத்தால், முதல்  இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இளம் வீரரும், விக்கெட் கீப்பரு மான ஜுரல் (90) மற்றும் ஜெய்ஸ்வால் (73) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத் தால் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின் (5), குல்தீப் யாதவின் (4) சுழலை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயம் செய்தது.

எட்டக்கூடிய இலக்குடன் கள மிறங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திங்களன்று தொடர்ந்து 4-ஆவது நாள் ஆட்டம் நடை பெற்றது. ரோகித் சர்மா (55), ஜெய்ஸ்வால் (37) ஓரளவு தாக்குப் பிடிக்க, பட்டிதார் (0), ஜடேஜா (4), சர்பிராஸ் கான் (0) ஆகியோர் சொற்ப ரன்னில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 120 ரன்னில் 5 முக்கிய விக்கெட்டு களை இழந்து தடுமாறியதால் இந்திய அணி தோல்வியை தழுவிவிடுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் மிடில் ஆர்டர் வீரர் சப்மன் கில் (52) - விக்கெட் கீப்பர் ஜுரல் (39) ஆகி யோர் இங்கிலாந்து அணியின் மிரட்ட லான பந்துவீச்சை திடமாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை (192 ரன்கள், 5 விக்கெட், 61 ஓவர்கள்) எளிதாக எட்டினர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற  கணக்கில் முன்னிலையுடன் தொடரை யும் கைப்பற்றியது.

இரண்டு இன்னி ங்ஸ்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலப்பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தல நகரமான தர்மசாலாவில் மார்ச் 7-ஆம் தேதி தொடங்குகிறது.