games

img

ஒரு நாள் ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை பரிசோதனை செய்து பார்ப்பேன் - விராட் கோலி 

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஒருநாள் தான் எழுந்திருக்கும் போது போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக எழுந்தால் தான் என்ன செய்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் ஆர்சிபி அணிக்கான போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என தெரிவித்த விராட் கோலி, ஒரு நாள் காலையில் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை பரிசோதனை செய்து பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். 

ஏனென்றால், ரொனால்டோவுக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

;