games

img

விளையாட்டு செய்திகள்

அமெரிக்காவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தியதற்காக ஐசிசிக்கு ரூ.167 கோடி இழப்பு

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடு களில்  கூட்டாக நடைபெற்றது. லீக் ஆட்டங்களின் ஒரு சில பகுதிகள் மட்டும் அமெரிக்காவில் நடைபெற்ற நிலை யில், மற்ற ஆட்டங்கள் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றன. டி-20 உலகக்கோப்பைக்காக பிரம்மாண்ட செலவுகள் செய்யப்பட்டதாக  அமெரிக்கா கூறினாலும் மைதான சர்ச்சை, மழை உள்ளிட்ட பிரச்சனை களுக்கு இடையே அங்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. 

மழை இயற்கை பேரிடர் என்பதால், இதை குறை எதுவும் கூற முடியாது என்ற நிலையில்,மைதான சர்ச்சை பெரிய பிரச்சனையாக இருந்தது. அமெரிக்க மைதானங்கள் அதிகள விலான உயிரோட்டமாக இருந்ததால் அங்கு ரன்கள் குவிக்க முடியவில்லை.  இதனால் அங்கு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களும் ஏதோ பயிற்சி ஆட்டங்கள் போல நடைபெற்ற நிலையில், அதிரடியாக விளையாட முடியாததால் ரசிகர்களின் கூட்ட மும் குறைந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தியதற்காக ரூ.167 கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தகவல் தெரிவித்துள்ள தாக பிடிஐ நிறுவனம் தகவல் தெரி வித்துள்ளது. ஆனால் இந்த இழப்பிற்கு என்ன காரணம் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரில் தொடக்க விழா

33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 அன்று தொடங்குகிறது. 206 நாடுகளில் இருந்து 10, 672 வீரர்கள் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 32 வகையான விளையாட்டுகள், 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா இதுவரை கேள்விப்படாத வகையில் மிகவும் வித்தியாசமான முறையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. பொதுவாக ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா மைதானங்களில் லேசர் தொழில்நுட்பம், சிறப்பு இசை, நடனத்துடன், நாடுகளின் அணிவகுப்பு நடைபெறும். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தொடக்க நிகழ்வு தண்ணீரில் நடைபெற உள்ளது. உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகில் உள்ள செய்னே (Seine) நதியில் தொடக்கவிழா நடைபெறுகிறது. இந்த தொடக்க விழாவிற்காக செய்னே நதி ரூ.12,522 கோடியில் பிரான்ஸ் அரசு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

செய்னே நதியில் நடைபெறும் தொடக்க விழாவில் படகில் அந்தந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள், தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர். இந்தியா சார்பாக தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமல் இந்திய கொடியை கையில் ஏந்தி செல்லும் பெருமித தருணத்தை காண மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரீஸில் ஊரடங்கு போன்று கட்டுப்பாடு

அடுத்த வாரம் ஒலிம்பிக் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாரீஸ் நகரின் மத்தியப்பகுதியில் ஊரடங்கிற்கு நிக ரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போர் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளது போன்று ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.

பாரீஸ் ஒலிம்பிக் இன்னும் 6 நாட்கள்