games

img

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற நினைக்கிறேன்  - ரவி சாஸ்திரி பேட்டி 

டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராகக் கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னால் வீரரான ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 2017 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார். அதன்பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். சாஸ்திரி பயிற்சியாளராக உள்ள இந்த ஐந்து வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு இருமுறை சென்று டெஸ்ட் தொடரைச் வென்றது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில்  இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.   

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் தொடருக்குப் பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருப்பதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் விலக வேண்டும் என நினைக்கிறேன். நான் நினைத்து அனைத்தையும் சாதித்து விட்டேன். கடந்த ஐந்து வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நம்பர் -1 அணி, ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடரில் வெற்றி மற்றும் இங்கிலாந்தில்  பெற்ற வெற்றிகள் என வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளையும் அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தோம். இதற்கு மேல் எதுவும் இல்லை.  

டி20 உலகக்கோப்பையையும்  வெற்றி பெற்றால் சிறப்பு தான். மேலும் பேசிய அவர்,  இந்திய அணியில் நான் சாதிக்க நினைத்ததை விடக் கூடுதலாகச் சாதித்து விட்டேன். இது முடிவடைகிறது என்பதில் எனக்கு வருத்தம் தான். மேலும் அணியில் அற்புதமான வீரர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அதோடு ஓய்வறையில் அருமையான நேரங்களைக் கழித்தோம். நாங்கள் வெளிப்படுத்திய தரமும் போட்டி முடிவுகளும் அற்புதமான பயணமாக அமைந்துள்ளது, என்று கூறியுள்ளார்.

;