games

img

ஆசிய கோப்பை கால்பந்து: தகுதி சுற்று ஆட்டத்தில் கம்போடியாவை வீழ்த்திய இந்தியா

இந்தியா - கம்போடியா மோதிய தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தா நகரின் பிதன்நகர் பகுதியில் உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வழக்கப்படி இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். ஆனால் கம்போடியா நாட்டு பெயரை அறிவித்து விட்டு அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்காமல் விடப்பட்டது கம்போடியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கம்போடிய கேப்டனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஆட்டம் தொடங்கியது.

ஆசிய கோப்பை கால்பந்துக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.  குரூப் “டி” பிரிவில்  இந்திய அணி கம்போடி யாவை எதிர்கொண்டது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கம்போடி யாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  இந்திய அணியின் வெற்றிக்கோல்கள் இரண்டையும் கேப்டன் சுனில் சேத்ரி அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.