games

img

உலகக் கோப்பை கால்பந்து 2022... இன்னும் 24 நாட்கள்

உலகக்கோப்பை தொடரை நடத்தவுள்ள மிகவும் குட்டி நாடான கத்தார் நாட்டில் அந்நாட்டின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப தான் பாதுகாப்புப் படை பலம் உள்ளது. கோடிக்கணக்கில் மக்கள் கூடும் உலகக்கோப்பையை நடத்து வதற்கு ஏற்ப கத்தார் நாட்டிடம் போது மான அளவு பாதுகாப்புப் படை கிடை யாது. இந்த பாதுகாப்பு பிரச்சனையை சமாளிக்க பல நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது கத்தார் அரசு. இதுவரை கையெழுத்திடப்பட்டுள்ள 13 நாடுகளுடன் சேர்ந்து, நாடு முழு வதும் 5 நாள் பாதுகாப்பு கூட்டு பயிற்சி யும் நடந்துள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் மட்டும் “வாடன்” (அரபு மொழியில் தேசம்) என்ற பெயரில் சிறப்பு படையில் 32,000 அரசுப் பாது காப்புப் பணியாளர்களும், தனியார் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 17,000 பேரும் பயிற்சியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

பாதுகாப்பில் துருக்கி ஆதிக்கம்

மைதானங்கள், ஹோட்டல்களைப் பாதுகாக்க 3,000 அதிரடி படை, 100 சிறப்பு போலீஸ் அதிகாரிகள், 50 வெடி குண்டு நிபுணர்கள், 80 மோப்ப நாய்கள், 677 கத்தார் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு முக்கிய பயிற்சி என  துருக்கி நாடு உலகக்கோப்பை பாது காப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மற்ற நாடுகளின் பாதுகாப்பு உதவி

பாகிஸ்தான் : ராணுவம் கலந்த பாதுகாப்புப்படை பிரான்ஸ் : 220 அதிநவீன பாது காப்புப்படை, ரசிகர்கள் வரிசைப்படுத்து தல், ரசிகர்களின் முழு பாதுகாப்பு பொறுப்பு மொராக்கோ : இணைய பாதுகாப்பு நிபுணர்கள் யுஏஇ : ராயல் கடற்படை பாதுகாப்பு, தேடுதல், செயல்பாட்டு திட்டமிடல், கட்டளை, கட்டுப்பாட்டு, பாதுகாப்பு தொடர்பான சிறப்பு ஆலோசனை அமெரிக்கா : தொழில்நுட்ப படை, சிறப்பு அதிரடி ஆயுதப்படை

இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில் கத்தார் நாட்டின் நகரங்கள், சாதாரண தெருக்கள் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில், அதிநவீன சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.