games

img

பாகிஸ்தானின் பீல்டிங் சர்வதேச கிரிக்கெட்டிலேயே மோசமானதாம்

தேர்தல் நெருங்கிவிட்டதால் தனது  வெறுப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் 42 வயதை கடந்துவிட்டா லும், இன்னும் பக்குவமின்றி அதிகார போதையுடனும், வெறுப்புணர்வுடனும் நடந்து கொண்டு அடிக்கடி சர்ச்சை யில் சிக்கி வருகிறார்.  ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் 10 ஆண்டு க்கு முன்னர் நடைபெற்ற மோதலை கடந்த சீசனிலும் லக்னோ அணியின் ஆலோச கர் என்ற உயர் பொறுப்பு டன் களமிறங்கி, மோதலை புதுப்பித்து மீண்டும் கோலி யுடன் மல்லு கட்டினார். அடுத்த சில மாதங்களில் ரசி கர்களை நோக்கி ஆபாச சைகை மூலம் டாப் டிரெண்டிங்கில் வறுபட்டார். வெறுப்புப் பேச்சு இந்நிலையில், மக்கள வைத் தேர்தல் நெருங்கி விட்டதால் வழக்கம் போல பாகிஸ்தான் அணியை விமர்சித்து வெறுப்புப் பிரச் சாரத்தை ஆரம்பித்து விட்டார் கவுதம் கம்பீர்.  பிரபல குளிர்பான நிறு வனமான தம்ஸ் அப் (thums up) நிறுவனம் வர விருக்கும் 2024 டி-20 உல கக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் மற்றும் கம்பீர் மூலம் விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பக்குவமாக பேசிய நிலையில், கவுதம் கம்பீர், “பாகிஸ்தான் அணி தான் உலகிலேயே மோசமான பீல்டிங் கொண்ட அணியாக உள்ளது. சமீபத்தில் நிறைவு பெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை யில் நான் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கை வெளிப்படை யாக கண்டேன். உண்மை யில் டி-20 வடிவ போட்டி களில் விளையாட விரும்பி னால் அவர்கள் தங்கள் காலு றைகளை மேலே இழுக்க வேண்டும்” என வெறுப்பாக பேசியுள்ளார்.

இது தேவையில்லாத பேச்சு இந்திய ரசிகர்கள் கண்டனம்

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணி சொதப்பினால் இதை மாற்ற வேண்டும், இதை செய்தால் மாற்றிக் கொள்ளலாம் என ஆலோசனை கூறுவதுதான் முன்னாள் வீரர்களின் கருத்தாக இருக்கும். இது காலங்காலமாக நடைமுறையில் உள்ள நிலையில், கம்பீர் மற்ற அணிகளை பற்றி நன்றாக பேசியும், பாகிஸ்தான் அணியை மட்டும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதாவது தான் அங்கம் வகிக்கும் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். கவுதம் கம்பீரின் இந்த பேச்சிற்கு இந்திய ரசிகர்களே கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.