games

img

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் கான்பூர் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷூப்மன் கில் களம் இறங்கினர். மயங்க் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்துக் களமிறங்கிய புஜாரா சுப்மன், கில்லுடன் ஜோடி சேர்ந்து இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து புஜாரா 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுக்க ஜோமிசன் பந்துவீச்சில் போல்டானார். இதனால், கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா மீண்டும் பெரிய இன்னிங்ஸ் விளையாடத் தவறிவிட்டனர். இருந்தாலும் அந்த குறையை அறிமுக வீரர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா கூட்டணி போக்கியது. இருவரும் 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்தியா 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நெருக்கடியான நிலையிலிருந்து அணியை இருவரும் மீட்டு 258 ரன்களுடன் முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்தனர்.  ஆட்ட நேர முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் 75 ரன்கள் எடுத்தார். ஜடேஜா, 50 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து  சார்பில்  அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் 

;