games

img

விளையாட்டு...

அல்சைமர் நோய்க்கு விழிப்புணர்வு
பெயர் இல்லாத ஜெர்சியுடன் விளையாடிய இங்கி., ஆஸி., கால்பந்து வீராங்கனைகள்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்தி ரேலிய கால்பந்து மகளிர் அணிகள் பங்கேற்ற நட்பு ரீதியிலான ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் இங்கி லாந்து தலைநகர் லண்டனில் நடை பெற்றது. தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும் இந்த ஆட்டத்தில் மற்றொரு முக்கியமான சம்பவம் ஒன்று அரங்கேறி விளையாட்டு உலகில் மட்டு மின்றி அனைத்து தரப்பிலும் பாராட்டு களை குவித்து உள்ளது. அந்த சம்பவம் யாதெனில் தற்போதைய உலகில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் போன்று அனைத்து தரப்பு மக்களிடம் நோயாக வளர்ந்து வரும்  அல்சைமர் நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு நாட்டு வீராங்கனைகளும் பெயர் இல்லாத ஜெர்சி அணிந்து விளையாடி னர்.

விழிப்புணர்வு ஏன்?

அல்சைமர் நோய் (Alzheimer disease) நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் ஒரு நோயாகும். மிக மெதுவான அறிகுறிகளுடன் (டிமென்ஷியா என்ற பெயரில் ஆரம்பம்) ஆரம்பித்து நாளடைவில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நீண்ட நாள்பட்ட நோயாகும். அல்சைமர் அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதி நோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். தற்போதைய காலகட்டத்தில் 60-70% ஆன மறதி நோய் அல்சைமர் நோயினால் ஏற்படுகின்றன.  முக்கியமாக இங்கிலாந்தில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தைக்கு டிமென்ஷியா அறிகுறிகள் உள்ளன. இதனால் தான் பிரிட்டன் தொண்டு நிறுவனமான அல்சைமர்ஸ் சொசைட்டி நிறுவனம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கால்பந்து மகளிர் அணிகளை வைத்து பெயர் இல்லா ஜெர்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

பெயர் இல்லா ஜெர்சி?

யாரையும் அடையாளப்படுத்தாமல், யாரையும் குறிப்பிடாமல், யாரையும் மனதில் ஞாபகம் வைக்காமல்  அவர்கள் அனைவரும் ஒரே கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் என்பதை உணர்த்தும்படி பெயர் இல்லா ஜெர்சி மூலம் விளையாடுவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் எந்த வீராங்கனைகளையும் மனதில் ஞாபகம் வைக்க முடியாதவர்கள் என்பதால் அவர்களுக்காக இவர்கள் பொதுவான விளையாட்டு வீரர்கள் என்ற ஏற்பாடு மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் முதன்முறையாக இந்த விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கால்பந்து வாரியங்கள் மற்றும் பிரிட்டன் தொண்டு நிறுவனமான அல்சைமர்ஸ் சொசை ட்டிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஐபிஎல் - 2023

தோனி விளையாடிய ஒரே ஓவரை 2.2 கோடி பேர் பார்த்தனர்

ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கடைசி ஓவரை (பேட்டிங்) அதாவது தோனி விளையாடிய ஒரே ஓவரை ஜியோ சினிமாவில் 2.2 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியை ஓடிடி-யில் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியை அதிகம் பேர் பார்த்த ஓடிடி என்ற பெயரையும் ஜியோ சினிமா பெற்றது. இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு சீசனின் இறுதிப் போட்டியில்  சென்னை - மும்பை அணியின் ஆட்டத்தை ஹாட் ஸ்டாரில் 1.8 கோடி பேர் பார்த்தனர். தற்போது இந்த சாதனையை  ஜியோ சினிமா மூலம் முறி யடித்துள்ளது. ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டியை பார்க்க தனியாக கட்டணம் எதுவுமில்லை என்பதால் சாதனை தடம் உருவாகியுள்ளது.

இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் - கொல்கத்தா
இடம் : கொல்கத்தா, மேற்கு வங்கம்  நேரம் : இரவு 7:30