கவாஸ்கர் மீது ரோகித் சர்மா புகார் எதிரொலி கிரிக்கெட் விளையாடாமல் வீட்டில் இருங்கள் என ரசிகர்கள் கண்டனம்
இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கேப்ட னாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா கடந்த 6 மாத காலமாக பார்ம் இழந்து தடுமாறி வருகிறார். கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட விளாசவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதே போல இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “ரோகித் சர்மா தனது கிரிக் கெட்டின் பார்ம் ஆழ்மனதில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த மோசமான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது” என அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில் கவாஸ்கரின் விமர்சனம் தேவையற்றது மற்றும் மிக வும் எதிர்மறையானது என இந்திய கட்டுப்பாட்டு வாரியத்திடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு ரசிகர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர். விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என் றால், ஒன்று நன்றாக விளையாடாமல் இருங்கள். இல்லையென்றால் கிரிக் கெட் விளையாடாமல் வீட்டிலேயே இருங்கள் என ரசிகர்கள் ரோகித் சர்மா விற்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா உலக சாதனை
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்கா ஒட்டுமொத்த டி-20 உலகில் அதிவேக மாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் புதிய சாதனை படைத்துள்ளார். தற்போது வனிந்து ஹசரங்கா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இன்டர்நேஷனல் லீக் டி-20 தொடரில் டெஸர்ட் வைப்பர்ஸ் விளையாடி வருகிறார். இத்தகைய சூழலில் ஷார்ஜா வாரி யர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் 201 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வனிந்து ஹசரங்கா சுழற்பந்துவீச்சாளர் மட்டுமின்றி நல்ல ஆல் ரவுண்டரும் கூட. அவர் இதுவரை 9 அரை சதங்களுடன் 2,335 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை 211 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 213 போட்டி களில் 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை கடந்து இருந்தார். அவர்கள் இருவரையும் முந்தி இருக்கும் வனிந்து ஹசரங்கா உலகிலேயே விரை வாக 300 டி-20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாத னையை படைத்துள்ளார். வனிந்து ஹசரங்கா 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் வென்ற மே.இ.தீவுகள்
3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிரா ஆனது. ஜனவரி 17 முதல் 21ஆம் தேதி வரை இரண்டா வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் (முல்தான் நகரில்) முதல் இன்னிங்சில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி வெறும் 154 ரன்களுக்கு சுருண்டது. 9 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 244 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 254 ரன்களை நிர்ண யம் செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வெறும் 133 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்ட நிலை யில், 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் போட்டியை வென்று அசத்தியுள்ளது.