games

img

விளையாட்டு...

அஸ்வின் இறங்கியிருந்தாலும் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும்

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2-வது சீசன் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. டி-20 ஆட்டம் போன்று பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்று வரலாறு படைத்தது. இந்திய  அணியின் தோல்விக்கு பல்வேறு கார ணம் இருந்தாலும், மிக முக்கிய காரண மாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஆடும் லெவனில் சேர்க்காததுதான் என்று கூறி சமாளிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அஸ்வின் கள மிறக்கப்பட்டிருந்தாலும் இந்திய அணி  கண்டிப்பாக தோல்வியை சந்தித்து தான் இருக்கும்.

தனிச்சிறப்பு எதுவும் கிடையாது

கிரிக்கெட் உலகின் பிரபல ஆப் ஸ்பின்னரான அஸ்வின் இங்கி லாந்து மண்ணில் நன்றாக பந்துவீசக் கூடியவர் என்று தனிச்சிறப்பு எதுவும்  கிடையாது. இங்கிலாந்து மைதானங் களில் ஒரு டெஸ்ட் ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்திய மைதானங்கள் போன்று 5 நாட்களும் ஒரே சீராக  இருக்காது. இங்கிலாந்து மைதானங் களில் முதல் நாள் வேகப்பந்துவீச்சு எடு பட்டால் இரண்டாம் நாள் ஆடுகளம் மாறுபடும். அதாவது சுழலுக்கு ஏற்றார் போல மாறும். மீண்டும் அடுத்த டுத்த நாட்களில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வேகம் மாறலாம், இல்லை சுழற் பந்துவீச்சுக்கு ஏற்றார் போல மந்த மாக கூட மைதானம் நிலைத்து நிற்கும்.  இங்கிலாந்து மைதானம் அடிக்கடி மாறுபடும் தன்மை கொண்டதால் அஸ்வினின் பவுன்சர் கலந்த சுழற்பந்துவீச்சு சற்று நன்றாக எடுபடும்  என்பதால், அஸ்வினை ஏன் சேர்க்க வில்லை என்றுதான் இந்திய, ஆஸ்தி ரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனரே தவிர, அஸ்வின் இல்லாததால்தான் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது என்றெல் லாம் மதிப்பிட முடியாது. 

அபாயகரமான ஆஸ்திரேலியா

கிரிக்கெட் உலகில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங், ஆட்டத்தை மாற்றுதல் என பல்வேறு சிறப்புகளை பார்ம்  மாறாமல் கொண்டிருக்கும் ஒரே அணி ஆஸ்திரேலிய அணியாகும். இத னால்தான் ஆஸ்திரேலிய அணி கிரிக் கெட் உலகின் மிகவும் அபாயகர மான அணி எனவர்ணிக்கப்படுகிறது. அதிரடி மனநிலை கொண்ட  ஆஸ்திரே லிய அணிக்கு எதிராக இந்திய அணி முழுபலத்துடன் களமிறங்கவில்லை.  கோலி, ரஹானே, ஷமி, ஜடேஜா,  சிராஜ் ஆகியோர் மட்டுமே ஆஸ்தி ரேலிய அணிக்கு நிகராக ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். மற்ற வீரர்கள் ரசிகர்கள் போல ஆஸ்தி ரேலிய வீரர்களின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்தனர். முக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போன்று அசமந்தமாக இருந்தார். இப்படி இந்திய அணிக்குள்ளே பல் வேறு பலவீனம் இருக்கும் பொழுது கோப்பையை வென்றே தீருவோம் என்ற முரட்டு மனநிலையில் விளை யாடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எப்படி சமாளிக்க முடி யும். இதுபோக எந்த நிலை வந்தா லும் ஒருகை பார்த்துவிடுவோம் என்ற மனநிலையிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொரு ஓவரையும் எதிர் கொண்டு விளையாடியதால் அஸ்வின் அணியில் இருந்திருந்தாலும் ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக வென்றிருக்கும் என்பது  உண்மை யான நிலைமை ஆகும். ஆனால் தோல்விக்கான காரணம், ஆட்டத் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு போன்ற வைகள் தொடர்பாக விளக்கம் அளிக் காமல் அஸ்வின் என்ற ஒரே ஒரு  பெயரை முன்னாள் வீரர்களும், 3 இறுதி போட்டிகள் நடத்த வேண்டும் என்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கருத்து ஆகி யவை தேவையில்லாததுதான். தோல் விக்கு காரணம், விளக்கம் தேவை யில்லை, தோல்விக்கான ஆய்வுதான் முக்கியம். அதாவது எங்கே நாம்  சொதப்பினோம், எதனால் நாம் தோற் றோம் என்று ஆய்வு செய்து வீரர்களை களையெடுக்க வேண்டும். இதனை தற்போதே சீர் செய்தால் வரவிருக் கும் உலகக்கோப்பை தொடரில் கட்டா யம் இந்திய அணி கோப்பைவெல்லும். இல்லையென்றால் அரையிறுதிக்கு கூட கரையேறாது என்பது குறிப்பிடத் தக்கது.

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023
நியூசிலாந்து அணிக்கு சிக்கல்

இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 18 அன்று ஜிம்பாப்வேயில் தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. இந்நிலையில், கோப்பை வெல்லும் அந்தஸ்து உள்ள அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து அணியில் காயம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கெனவே அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது முன்னணி ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல் தசைநார் சிதைவு காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விலகிய இரண்டுபேரும் நியூசிலாந்து அணியின் மிக முக்கிய வீரர்கள் என்பதால் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎல் 2023
இன்றைய ஆட்டம்
சென்னை- திருப்பூர்
நேரம் : இரவு 7:15 அணி
இடம் : எஸ்என்ஆர் மைதானம், கோவை
சேனல் : தொலைக்காட்சி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஒடிடி - வூட் (VOOT)