games

img

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை!

பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக கபில்தேவ் தலைமையிலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய கோரி ஒரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது மனவேதனை அளிப்பதாக 1983இல் உலகக்கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையில் சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்ததைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், அவசர முடிவு எதுவும் எடுக்கவேண்டாம் என்றும், கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

;