games

img

தென்னாப்பிரிக்கா டி20 தொடர்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகள் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இரு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

அட்டவணை:  

ஜூன்9 ஆம் தேதி முதல் டி20 போட்டி டெல்லியிலும், ஜூன் 12 ஆம் தேதி இரண்டாவது டி20 கட்டாக்கிலும், ஜூன் 14 மூன்றாவது டி20 விசாகப்பட்டினத்திலும், ஜூன் 17 நான்காவது டி20 ராஜ் காட்டிலும், ஜூன் 19 ஐந்தாவது டி20 பெங்களூருவிலும் நடைபெறுகிறது. 

;